Sunday, August 3, 2025

Maulbronn Kloster

 


மவுல்ப்ரோன் மடம். என் லியோன்பெர்க் பகுதியிலிருந்து ஏறக்குறைய 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற ஒரு மடாலயம்.
இந்த தேவாலயம் மற்றும் மடப்பள்ளி கத்தோலிக்க கிறிஸ்துவ சமய மடமாக 1147 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால் இப்பகுதியில் சீர்திருத்த கிருத்துவம் பரவலாக்கம் கண்ட பின்னர் 16ஆம் நூற்றாண்டில் இந்த மடம் சீர்திருத்த ப்ரொட்டஸ்டன்ட் மதத்தைச் சார்ந்த மடமாக மாறியது.
மிகப்பெரிய வளாகம். இரண்டு அருங்காட்சியங்கள் இதற்குள் இருக்கின்றன.
நாம் நன்கு அறிந்த இரண்டு அறிஞர்கள்-
யோகானஸ் கெப்ளர் , இவரது பெயரில் நாசா செட்டிலைட் ஒன்றிற்கு கெப்ளர் சட்டலைட் என்று பெயர் வைத்திருக்கின்றது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். அவர் படித்த பள்ளி இது. அடுத்து நமக்கெல்லாம் தெரிந்த சித்தார்த்தன் நாவலை எழுதிய ஹெர்மான் ஹெஸ்ஸ படித்த கல்லூரியும் இதுதான். அவர் பின்னர் இந்தியா இலங்கை என வந்து புத்த மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு சித்தார்த்தா என்ற நாவலை எழுதினார். அது நோபல் பரிசு பெற்றது.
இன்று யுனஸ்கோவின் பாதுகாக்கப்படுகின்ற ஒரு மரபுச் சின்னமாக இந்த மடாலயம் அமைந்துள்ளது.
இதன் வரலாற்றைப் பற்றி இரண்டு காணொளிகள் இணைத்திருக்கின்றேன். பார்த்து மகிழுங்கள்.
-சுபா
3.8.2025














பிலிப் மெலஞ்தோன் - Bretten

 


இன்று ஞாயிற்றுக்கிழமை. ஜெர்மனியில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட அருங்காட்சியங்களில் வீட்டிற்கு சற்று தூரம் இல்லாத பகுதிகளில் உள்ள சில அருங்காட்சிகளைப் பார்த்து வரலாம் என கிளம்பி விட்டேன்.
90களின் தமிழ் பாடல்களை கேட்டுக்கொண்டு வாகனத்தில் பயணம் செய்வது சுகமான அனுபவம் தானே 🙂
முதலில் நான் வந்தது வீட்டிலிருந்து 42 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரெட்டன் (Bretten) என்ற சிறு நகரம். சீர்திருத்த கிருத்துவம் அதாவது புரோட்டஸ்டன்ட் மதம் என்று சொல்லப்படுகின்ற இச்சமய உருவாக்கத்தில் முக்கியமான ஒரு நகரம். ஆம் பிலிப் மெலஞ்தோன் பிறந்த ஊர்.
இவர் யார்? தெரிந்து கொள்வோமே.
சீர்திருத்த கிருத்துவ மதம் என சொல்லப்படும் ப்ராட்டஸ்டண்ட் மதத்தை உருவாக்கிய மார்ட்டின் லூதர் உடன் இணைந்து பணியாற்றியவர். அவர் பணியாற்றிய அதே விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தில் இவரும் சமயத்துறை பேராசிரியராக பணிபுரிந்தவர். இருவரும் இணைந்து சீர்திருத்தங்களை மக்களிடையே கொண்டு வந்தனர்.
கத்தோலிக்க சமய அமைப்பான வார்த்தைகளின் கிளை நிறுவனங்களுடன் பல மத விவாதங்களில் பங்கேற்றத்துடன் மிக முக்கியமான "ஆக்ஸ்புர்க் அறிக்கையை" 1530 ஆம் ஆண்டு எழுதியவர் என்ற புகழுக்கு சொந்தக்காரர்.
பிலிப் எழுதிய 9000 க்கும் மேற்பட்ட கடிதங்கள் இந்த அவரது இல்லத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
ஒரு வீடியோ ஒன்றும் இணைத்திருக்கின்றேன். காணுங்கள். இந்த இல்லத்தைப் பற்றிய முக்கியமான செய்திகளை அதில் பகிர்ந்திருக்கின்றேன்.
-சுபா
3.8.2025