மவுல்ப்ரோன் மடம். என் லியோன்பெர்க் பகுதியிலிருந்து ஏறக்குறைய 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற ஒரு மடாலயம்.
மிகப்பெரிய வளாகம். இரண்டு அருங்காட்சியங்கள் இதற்குள் இருக்கின்றன.
நாம் நன்கு அறிந்த இரண்டு அறிஞர்கள்-
யோகானஸ் கெப்ளர் , இவரது பெயரில் நாசா செட்டிலைட் ஒன்றிற்கு கெப்ளர் சட்டலைட் என்று பெயர் வைத்திருக்கின்றது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். அவர் படித்த பள்ளி இது. அடுத்து நமக்கெல்லாம் தெரிந்த சித்தார்த்தன் நாவலை எழுதிய ஹெர்மான் ஹெஸ்ஸ படித்த கல்லூரியும் இதுதான். அவர் பின்னர் இந்தியா இலங்கை என வந்து புத்த மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு சித்தார்த்தா என்ற நாவலை எழுதினார். அது நோபல் பரிசு பெற்றது.
இன்று யுனஸ்கோவின் பாதுகாக்கப்படுகின்ற ஒரு மரபுச் சின்னமாக இந்த மடாலயம் அமைந்துள்ளது.
இதன் வரலாற்றைப் பற்றி இரண்டு காணொளிகள் இணைத்திருக்கின்றேன். பார்த்து மகிழுங்கள்.
No comments:
Post a Comment