Sunday, July 27, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 9

ஒன்றை உருவாக்குதல் என்பது எளிதன்று. அதற்கு சிந்தனைத் திறன், செயல்திறன், உருவாக்கத் திறன் ஆகிய அனைத்தும் இணங்கி இயைந்து செயல்பட வேண்டும்.

ஆனால் ஒன்றினை சிதைத்தல் என்பது தான் எவ்வளவு சுலபமான ஒரு  ​காரியமாகி விடுகின்றது?

அயோத்தையா நகரை மன்னர் ராமாதிபோதி 1350ம் ஆண்டில் உருவாக்கினார். அவர் பரம்பரையில் அடுத்தடுத்து வந்தோரும் ஆட்சி செய்தோரும் படிப்படியாக அந்த நகரையே கலைக்கோயில்கள் நிரம்பிய புனித பூமியாக மாற்றினர். திபேத், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் இங்கிருந்து புத்த பிக்குகள் சென்று வருவதும், அந்த நாடுகளில் தங்கியிருந்து புத்த பிக்குகள் பயிற்சி மேற்கொண்டு திரும்பி வந்து உள்ளூரில் பௌத்தம் வளர்ப்பதும் நடைபெற, அயோத்தையா ஏறக்குறைய 300 ஆண்டு செழிப்புடன் கிழக்காசியாவில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது.

1767ம் ஆண்டில் பர்மிய படையினர் தொடுத்த பேர் அயோத்தையாவை முழுமையாக அதன் சிறப்பை இழக்கச் செய்தது.  அரச பரம்பரயினரின் அரண்மனைகளும் அரசாங்க கட்டிடங்களும் முற்றும் முழுவதுமாக இப்போரின் போது அழிக்கப்பட்டாலும் இப்பகுதியில் அமைந்திருக்கும் புத்த ஆலயங்களில் பல  சேதத்தைக் காணவில்லை. ஆயினும் அரண்மனைப் பகுதியைச் சுற்றிலும் உள்ள கலைச்சிறப்பு மிக்க பல விகாரைகள் சிதலமடைந்து இன்றும் இந்த வரலாற்றுப் பேரழிவை நினைவுறுத்திக் கொண்டிருப்பதை இன்றும் அங்கு நாம் செல்லும் போது உணர முடிகின்றது.



அயோத்தையாவில் வாட் யாய் சாய் மொங்கோன் பார்த்த பின்னர் அங்கிருந்து சற்றே அயோத்தையா நகருக்குள் எங்கள் பேருந்து நுழைந்தது. ஆங்காங்கே செங்கற்கோயிற்கள்.. புத்த விகாரைகள்.. அடுத்தடுத்து வரிசையாக சில.. தனியாக நிற்கும் விகாரைகள்.. இவை அனைத்துமே வழிபாட்டுக்கு உகந்த நிலையில் இல்லாது உடைந்து சிதிலமடைந்த நிலையிலேயே இன்றளவும் காட்சியளிக்கின்றன.

பேருந்தை அயோத்தையா ஹெரிட்டேஜ் பார்க் வாயிற் புறத்தில் பேருந்து நிற்கும் இடத்தில் நிறுத்தி விட்டு எங்களை எங்கள் பயண வழிகாட்டி சிதிலமடைந்த அரண்மனைப் பகுதியையும் அதனைச் சுற்றி அமைந்திருக்கும் சேதமடந்த புத்த விகாரைகளையும் பார்த்து வர அழைத்துச் சென்றார்.

சிதலமடைந்த நிலையிலே கூட கண்களைக் கவரும் இந்த கோயில்கள் அதன் சிறப்பு கெடாமல் இருந்தால் இன்னும் காண கண் கோடி வேண்டுமோ என்று எண்ண வைத்தது அங்கு நான் கண்ட காட்சி.

இப்பகுதியில் அமைந்திருப்பதே வாட் ப்ரா சி சன்பெட் புத்த விகாரை. அயோத்தையாவின் மிக முக்கிய வழிபாட்டுத்தலமாக அமைந்திருந்த கோயில் இது. இந்த கோயிலும் அதனைச் சுற்றிய வளாகமும் அமைந்திருக்கும் பகுதி 1350 முதல் 1448 வரை அரசபரம்பரையினர் அதிகாரப்பூர்வ மடாலயமாகத் திகழ்ந்தது. இங்கு குறிப்பாக அமைந்திருக்கும் மூன்று விகாரைகளில் அயோத்தையா அரசர்கள் மூவரின் எரிக்கப்பட்ட பூத உடலின் சாம்பலும் எலும்புகளும் தனித்தனி விகாரைகளில் தகனம் செய்யப்பட்டுள்ளன. இந்த விகாரைகள் முற்றும் முழுதும் சேதம் அடையாத போதும் கூட  கதவுகள் முழுதாக அடைக்கப்பட்டு பார்வையாளர் யாரும் உட்சென்று காண இயலாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன.




இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடம் ஒரு நீள்சதுர அமைப்பில் ஒரு வளாகம் போல அமைந்துள்ளது. இங்கே முன்னர் 16 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்ட புத்தரின் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இச்சிலை செம்பினால் செய்யப்பட்டு  அதன் மேல் பகுதி முழுமையாக தங்கத்தால் போர்த்தப்பட்ட வகையில் அமைக்கப்பட்ட ஒரு சிற்பமாக இது உருவாக்கப்பட்டு வழிபாட்டில் அங்கம் வகித்தது. அயோத்தையா படையினருக்கும் பர்மிய படையினருக்கும் நடைபெற்ற போரின் போது இந்தப் பகுதி அழிக்கப்பட்ட நிலையில் இங்கிருந்த இந்த புத்தர் சிலையை பர்மிய படையினர் அதன் மேல் பகுதி தங்கத்திற்காக இச்சிலையை எரித்து தங்கத்தை எடுத்துக் கொண்டனர்.  மிஞ்சிய செம்பு வடிவ சிற்பம் மட்டும் சேதமின்றி தங்கிவிட இந்தச் சிற்பமே தற்போது அமைக்கப்பட்டுள்ள வாட் போ ப்ரா மஹா சேடி சி சான்பட் ஆலயத்தினுள் ப்ரமாண்டமாக அமைக்கப்பட்டு வழிபாடும் நடந்து வருகின்றது.

தொடரும்..

சுபா

குறிப்புக்கள்
http://www.aseanworldheritage.com/2011/10/city-ayutthaya-historical-park-1.html
http://en.wikipedia.org/wiki/Ayutthaya_Historical_Park

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 8

​ஒன்றை உருவாக்குதல் என்பது எளிதன்று. அதற்கு சிந்தனைத் திறன், செயல்திறன், உருவாக்கத் திறன் ஆகிய அனைத்தும் இணங்கி இயைந்து செயல்பட வேண்டும்.

ஆனால் ஒன்றினை சிதைத்தல் என்பது தான் எவ்வளவு சுலபமான ஒரு  ​காரியமாகி விடுகின்றது?

அயோத்தையா நகரை மன்னர் ராமாதிபோதி 1350ம் ஆண்டில் உருவாக்கினார். அவர் பரம்பரையில் அடுத்தடுத்து வந்தோரும் ஆட்சி செய்தோரும் படிப்படியாக அந்த நகரையே கலைக்கோயில்கள் நிரம்பிய புனித பூமியாக மாற்றினர். திபேத், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் இங்கிருந்து புத்த பிக்குகள் சென்று வருவதும், அந்த நாடுகளில் தங்கியிருந்து புத்த பிக்குகள் பயிற்சி மேற்கொண்டு திரும்பி வந்து உள்ளூரில் பௌத்தம் வளர்ப்பதும் நடைபெற, அயோத்தையா ஏறக்குறைய 300 ஆண்டு செழிப்புடன் கிழக்காசியாவில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது.

1767ம் ஆண்டில் பர்மிய படையினர் தொடுத்த பேர் அயோத்தையாவை முழுமையாக அதன் சிறப்பை இழக்கச் செய்தது.  அரச பரம்பரயினரின் அரண்மனைகளும் அரசாங்க கட்டிடங்களும் முற்றும் முழுவதுமாக இப்போரின் போது அழிக்கப்பட்டாலும் இப்பகுதியில் அமைந்திருக்கும் புத்த ஆலயங்களில் பல  சேதத்தைக் காணவில்லை. ஆயினும் அரண்மனைப் பகுதியைச் சுற்றிலும் உள்ள கலைச்சிறப்பு மிக்க பல விகாரைகள் சிதலமடைந்து இன்றும் இந்த வரலாற்றுப் பேரழிவை நினைவுறுத்திக் கொண்டிருப்பதை இன்றும் அங்கு நாம் செல்லும் போது உணர முடிகின்றது.



அயோத்தையாவில் வாட் யாய் சாய் மொங்கோன் பார்த்த பின்னர் அங்கிருந்து சற்றே அயோத்தையா நகருக்குள் எங்கள் பேருந்து நுழைந்தது. ஆங்காங்கே செங்கற்கோயிற்கள்.. புத்த விகாரைகள்.. அடுத்தடுத்து வரிசையாக சில.. தனியாக நிற்கும் விகாரைகள்.. இவை அனைத்துமே வழிபாட்டுக்கு உகந்த நிலையில் இல்லாது உடைந்து சிதிலமடைந்த நிலையிலேயே இன்றளவும் காட்சியளிக்கின்றன.

பேருந்தை அயோத்தையா ஹெரிட்டேஜ் பார்க் வாயிற் புறத்தில் பேருந்து நிற்கும் இடத்தில் நிறுத்தி விட்டு எங்களை எங்கள் பயண வழிகாட்டி சிதிலமடைந்த அரண்மனைப் பகுதியையும் அதனைச் சுற்றி அமைந்திருக்கும் சேதமடந்த புத்த விகாரைகளையும் பார்த்து வர அழைத்துச் சென்றார்.

சிதலமடைந்த நிலையிலே கூட கண்களைக் கவரும் இந்த கோயில்கள் அதன் சிறப்பு கெடாமல் இருந்தால் இன்னும் காண கண் கோடி வேண்டுமோ என்று எண்ண வைத்தது அங்கு நான் கண்ட காட்சி.

இப்பகுதியில் அமைந்திருப்பதே வாட் ப்ரா சி சன்பெட் புத்த விகாரை. அயோத்தையாவின் மிக முக்கிய வழிபாட்டுத்தலமாக அமைந்திருந்த கோயில் இது. இந்த கோயிலும் அதனைச் சுற்றிய வளாகமும் அமைந்திருக்கும் பகுதி 1350 முதல் 1448 வரை அரசபரம்பரையினர் அதிகாரப்பூர்வ மடாலயமாகத் திகழ்ந்தது. இங்கு குறிப்பாக அமைந்திருக்கும் மூன்று விகாரைகளில் அயோத்தையா அரசர்கள் மூவரின் எரிக்கப்பட்ட பூத உடலின் சாம்பலும் எலும்புகளும் தனித்தனி விகாரைகளில் தகனம் செய்யப்பட்டுள்ளன. இந்த விகாரைகள் முற்றும் முழுதும் சேதம் அடையாத போதும் கூட  கதவுகள் முழுதாக அடைக்கப்பட்டு பார்வையாளர் யாரும் உட்சென்று காண இயலாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன.



இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடம் ஒரு நீள்சதுர அமைப்பில் ஒரு வளாகம் போல அமைந்துள்ளது. இங்கே முன்னர் 16 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்ட புத்தரின் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இச்சிலை செம்பினால் செய்யப்பட்டு  அதன் மேல் பகுதி முழுமையாக தங்கத்தால் போர்த்தப்பட்ட வகையில் அமைக்கப்பட்ட ஒரு சிற்பமாக இது உருவாக்கப்பட்டு வழிபாட்டில் அங்கம் வகித்தது. அயோத்தையா படையினருக்கும் பர்மிய படையினருக்கும் நடைபெற்ற போரின் போது இந்தப் பகுதி அழிக்கப்பட்ட நிலையில் இங்கிருந்த இந்த புத்தர் சிலையை பர்மிய படையினர் அதன் மேல் பகுதி தங்கத்திற்காக இச்சிலையை எரித்து தங்கத்தை எடுத்துக் கொண்டனர்.  மிஞ்சிய செம்பு வடிவ சிற்பம் மட்டும் சேதமின்றி தங்கிவிட இந்தச் சிற்பமே தற்போது அமைக்கப்பட்டுள்ள வாட் போ ப்ரா மஹா சேடி சி சான்பட் ஆலயத்தினுள் ப்ரமாண்டமாக அமைக்கப்பட்டு வழிபாடும் நடந்து வருகின்றது.

தொடரும்..

சுபா

குறிப்புக்கள்
http://www.aseanworldheritage.com/2011/10/city-ayutthaya-historical-park-1.html
http://en.wikipedia.org/wiki/Ayutthaya_Historical_Park

Thursday, July 3, 2014

படம் சொல்லும் தமிழகம் 2014 - 3

மண் வீடு ...சென்ற ஆண்டு ஒரு நண்பர் மாலன் அறிமுகப்படுத்திய அழகிய உணவகம். இந்த ஆண்டும் சென்று வர ஆவல் ஏற்பட்டதால் பேரா.நாகராசனும், பேரா.தெய்வசுந்தரமும் மதிய உணவுக்கு எங்கே போகலாம் என்ற உடனேயே அடையாரில் மண் வீடு என்று சொல்லி விட்டேன்.முதலில் மணல் வீடு என்று சொல்லி குழப்பியதில் ..அவர்கள் தேடினால் மணல் வீடு என்ற பெயரையே டைரக்டரியில் காணவில்லை. பின்னர் நண்பரைக் கேட்டு சரி செய்து மண் வீடு என அறிந்து தேடினால் முன் வீடு என இணையம் காட்ட.. இல்லை அது மண் வீடு என அறிந்து அங்கு சென்று மதிய உணவு சாப்பிட்டோம்.

முருங்கை இலை தக்காளி ரசம் ஸ்டார்ட்டர்..கொஞ்சம் காரமாக இருந்தாலும் ம்ம்ம் சுவை பிரமாதம்..

பிறகு பதிய உணவு.. காரக் குழம்பு .. முருங்கை இலை பருப்பு கூட்டு, வாழைப்பு வடை என எல்லாம் சுவையில் ப்ரமாதம்.

Tuesday, July 1, 2014

படம் சொல்லும் தமிழகம் 2014 - 2



வைகை ஆற்றைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். மானாமதுரை... திருப்பாச்சேத்தி... அப்படியே திருப்பூவனம் வரும் போது பெரிய பாலத்தை இருமுறை கடந்து வாகனத்தில் பயணித்து வரும் போது வைகை இதோ என்று நண்பர்கள் சொல்ல,  எட்டிப் பார்த்தால்.. நீரில்லா வைகை தான் கண்களுக்கு புலப்பட்டது.

ஆற்றிலே நீரோடு உன்னை  மீண்டும் காண வேண்டும் வைகையே!

சுபா

Saturday, June 28, 2014

படம் சொல்லும் தமிழகம் 2014 - 1

படங்கள் சொல்லும் செய்தி என்பது மனித மனதின் எண்ணங்களுக்கும் பார்வைக்கும் ஏற்ப மாறுபடுவது தானே!

தமிழகத்தில் ஆங்காங்கே நான் பார்த்த காட்சிகளில் சில...

தொடர்ந்து இந்த இழையில் பகிர்ந்து வரலாம் என நினைக்கின்றேன்.

உங்கள் கருத்துக்கள் இந்த இழையைச் சிறப்பிக்கும் நண்பர்களே!.

படம் 1.

திருமலை (திருவண்ணாமலைக்கு அருகில்) பகுதியில் எடுக்கப்பட்ட படம். காலை 5.30 மணி வாக்கில் எடுக்கப்பட்டது. திருமலை சமண மடத்தில் பூஜை ஆறு  மணிக்கு நடைபெறும் என்றும் கலந்து கொள்ள தயாராகி இருக்கும் படியும் சொல்லியிருந்தார்கள். நான் 5.30 மணிக்கு முன்னராகவே எழுந்து வயல் வெளியில் நடந்த போது நிகழ்ந்த சூரியோதயத்தை என் காமெராவில் பதிவு செய்தேன்!


Tuesday, June 3, 2014

கோல்மார் நகரில் ஒரு நாள்..!




ஜெர்மனிக்கும் ஃப்ரான்ஸ் நாட்டிற்கும் இடையில் ​இருக்கும் ஒரு நகரம் கோல்மார் (Colmar).  9ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகரம்.
இந்த நகரம் 1871-1918 வரை ஜெர்மனியின் எல்லைக்குள் இருந்தது. அதன் பின்னர் குறுகிய காலம் 2ம் உலகப் போர் காலகட்டத்திலும் (1940-1945) கோல்மார் ஜெர்மனியின் வசம் இருந்த நகர்.

அல்ஸாஸ் என சிறப்புடன் அறியப்படும் இப்பகுதியில் லிட்டல் வெனிஸ் பிரபலமானது. இங்கு படகுப்பயணம் செய்வதும் சுற்றுப்பயணிகளைக் கவரும் ஒரு அம்சம்.

அது மட்டுமல்ல.. 7க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் இங்குள்ளன. 

கோல்மார் செல்ல விரும்புபவர்கள் பயண வழிகாட்டி நூலிலோ அல்லது இணைய பக்கத்திலோ தேடினால் இந்த நகரைப் பற்றிய தகவல்கள், இங்கு முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்கள் என நீண்ட பட்டியல் தயாரித்துக் கொண்டு செல்லலாம்.

சில மிக முக்கிய இடங்களாக 
  • பார்த்தோலி மியூஸியம்
  • உண்டெர் லிண்டென் மியூஸியம்
  • செயிண்ட் மார்ட்டின் தேவாலயம்
  • லிட்டல் வெனிஸ் பகுதி
  • தி கோய்ஃபுஸ் 
  • டோமினிக்கன் தேவாலயம்
  • மீனவர் கிராமம்
  • Statue of Liberty  சிறிய வடிவிலானது. சாலையின் நடுவே வெண்கலத்தால் அமைக்கப்பட்ட சிலை இது
  • யூதர்களின் தேவாலயம் - சினாகோக்


...இப்படி பல இடங்களை பார்த்து மகிழ்ந்து வரலாம்.

இங்கு நேற்று நானும் என் உறவினர் திலகேஸ், நண்பர் அருண்குமார் மூவரும் ஒரு நாள் பயண்ம் சென்றிருந்தோம். பத்தோலி அருங்காட்சியகம், லிட்டல் வெனிஸ் பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படம் இங்கே. சில..!


























































Friday, May 23, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 7

சாவ் ப்ராயா

சாவ் ப்ராயா, தாய்லாந்தின் மத்திய நிலத்தில் பாய்ந்தோடும் ஒரு நதி. வடக்கே நக்கோன் ஸ்வான் வட்டாரத்தில் பிங், நான் ஆகிய இரண்டு நதிகளின் சங்கமத்தில் உருவாகும் நதி இது.  சாவ் ப்ரயா நதிக்கு இன்னொரு பெயரும் தாய் மொழியில் உண்டு.  மீ நாம் என்பது இந்த மற்றொரு பெயர்.  மி என்பது அன்னை என்ற பொருளிலும் நாம் என்பது நதி என்ற பொருளிலும் அடையாளம் காணப்படுவது. இணைத்து வாசிக்க அன்னை நதி என பொருள் பெறுகின்றது. தாய்லாந்தின் வடக்கு தொடங்கி பாங்காக் நகரைக் கடந்து 372கிமீ தூரம் பயணித்து தாய் குடாவில் கலக்கின்றது சாவ் ப்ராயா நதி.

சாவ் ப்ரயா நதி  பல நூற்றாண்டுகளாக தாய்லாந்து நாட்டின் பசுமைக்குக் காரணமாக இருப்பது. விவசாயமே தாய்லாந்தின் மிக முக்கிய தொழில் என்பது நாம் அறிந்ததே. ஆக மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான விவசாயம் செழிக்க உதவும் வற்றாத நீரை வழங்கும் இச்சவ் ப்ராயா பகுதியில் அதிகமாக மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது என்பதும் அதன் பொருட்டு சாம்ராஜ்ஜியங்களும் அரசாட்சிகளும் இவ்விடங்களை மையமாகக் கொண்டு அமைந்தன என்பதனையும் காண முடிகின்றது. இப்படி சாவ் ப்ராயா நதிக்கருகில் இருக்கும் ஒரு நகரம் தான் அயோத்தையா!


வாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்


14ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் தூற்றாண்டு வரை கிழக்காசியப் பகுதியில் தனிச்சிறப்பும் புகழும் பெற்று விளங்கிய நகரமாக அயோத்தையா விளங்கியது. பல ராஜ்ஜியங்களை உள்ளடக்கிய பேரரசுக்குத் தலைநகரமாக இக்காலகட்டத்தில் அயோத்தையா விளங்கியது- இந்நகரத்தில், அதிலும் குறிப்பாக சாவ் ப்ராயா நதிக்கருகே பல ப்ரமாண்டமான கோயில்களும் கட்டிடங்களும் உருவாக்கப்பட்டன. 1350ம் வருஷம் ராமாதிபோதி எனும் மன்னரால் (1351 - 1369)  அயோத்தையாவின் தலைநகரம் உருவாக்கப்பட்டது.

அயோத்தையாவுக்கு அருகில் இருக்கும் நகர் லோப் பூரி. இந்த நகரில் அக்காலகட்டத்தில் மிக விரிவாக அம்மை நோய் பரவியது. நோய்க்கு மருந்து கிடைக்காது பலர் இப்பகுதியை விட்டு வெளியேறினர்.  அப்பகுதியின் மன்னர் யூ தோங், லோப் பூரி நகரில் விரிவாகப் பரவிய அம்மை நோயிலிருந்து தன்னையும் தன்னை சார்ந்திருந்த மக்களையும் காக்கும் பொருட்டு அங்கிருந்து வெளியேறி புதிய ஓரிடத்திற்கு வந்தடைந்தார். இங்கு தனது பெயரை ராமாதிபோதி என அமைத்துக் கொண்டு தான் வந்தடைந்த நகரான அயோத்தையாவில் தனது ராஜ்ஜியத்தை அமைத்து தலைநகரை உருவாக்கி  அப்பகுதியை ஆட்சி செய்ய ஆரம்பித்தார் என்பது வரலாறு.

மன்னர் யூதோங் பற்றி மற்றுமொரு கதையும் உண்டு. இவர் சீனதேசத்தைப் பூர்வீகமாக கொண்ட ஒரு வர்த்தகர் என்றும் தற்போதைய பாங்காக் நகர் இருக்கும் பெட்சாபூரி மாவட்டத்தைச் சார்ந்தவர் என்றும் வர்த்தக நோக்கில் அயோத்தையா நகர் இருக்கும் பகுதிக்கு வந்து பின்னர் மன்னரானவர் என்றும் கூறப்படுகின்றது.


வாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்


15ம் நூற்றாண்டு வாக்கில் அயோத்தையா தனது ஆட்சி நிலப்பரப்பையும் ஆளுமையையும் விரிவாக்கி இப்பிராந்தியத்தில் மிகப் பிரபலமான ஒரு இடமாக உருவாகியது. அக்காலத்தில் மற்றொரு புகழ்வாய்ந்த நகரமும் மிகப் பெரிய ராஜ்ஜியமுமாக விளங்கிய  சுக்கோத்தை பேரரசியும் 15ம் நூற்றாண்டின் மத்தியில் அயோத்தையாவின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தது. உள்ளூரிலும் ஏனைய ஆசிய நாடுகளிலும் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளிலும் வர்த்தகத்தை வளப்படுத்தும் முயற்சியில் இறங்கியதன் பலனாக ஐரோப்பிய வர்த்தகர்களின் வருகை அயோத்தையாவிலும் ஏற்பட்டது. இது அயோத்தையாவின் செல்வச் செழிப்பை மென்மேலும் அதிகரித்த வண்ணம் புகழ் பெறச் செய்தது.

தாய்லாந்திற்கு முன்னர் சியாம் அல்லது சயாம் என்ற பெயர் இருந்தது என்பதை நம்மில் பலர் அறிவோம். இப்பெயர் குறிப்பிடப்படும் நிலப்பகுதி அயோத்தையா தான்.

1767ல் நடைபெற்ற போரில் அயோத்தையா மிக மோசமாக பர்மிய படையினரால் சேதப்படுத்தப்பட்டது. அரச மாளிகைகள் தகர்க்கப்பட்டன. இதன் பொருட்டு தலைநகர் அயோத்தையாவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு தற்போதைய பாங்காக் நகருக்கு பெயர்ந்தது. அது முதல் பாங்காக் நகரமே தாய்லாந்தின் பரந்த நிலப்பரப்பின் தலைநகரமாக விளங்கி வருகின்றது.


வாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்


அயோத்தையாவின் பெயர் நமக்கு அயோத்தியை ஞாபகப் படுத்தலாம்.

இந்திய நிலப்பரப்பில் ராம ராஜ்ஜியம் விளங்கிய நகரான அயோத்தியின் பெயர் அடிப்படையில் அமைந்தது தான் தாய்லாந்தின் அயோத்தையா நகரம்.  ராமாயணக் காப்பியம் தாய்லாந்தில் ராமாக்கியன் என்ற பெயரில் சற்றே மாறுபட்ட கதையம்சங்களுடன் மக்கள் வாழ்வில் ஏற்றக்கொள்ளப்பட்ட ஒரு அம்சமாகத் திகழ்கின்றது. தாய்லாந்தின் மன்னர்கள் பெயர்களைப் பார்க்கும் போது, பல நூற்றாண்டுகளாக ராமா என்ற பெயர் மன்னர்களின் பெயருடன் இணைந்திருப்பதை நன்கு காண முடியும்.

தாய்லாந்து அரச பரம்பரையில் மன்னராக முடிசூடும் நாளில் அம்மன்னன் தன்னை ராமராக நினைத்து தான் அமைக்கும் ராஜ்ஜியம் ராமராஜ்ஜியமாக இருக்கும் என உறுதி மொழி கூறி ஆட்சிப்பொறுப்பை எற்கின்றார். இங்கு தெய்வமும் அரசரும் இரு வேறு பொருளாக இருந்தாலும் இரண்டும் இணைந்த முக்கியத்துடன் திகழ்வதாக உருவாக்கம் செய்யப்பட்டு ராம அவதாரமே மன்னர் என்ற நிலையில் மக்கள் மன்னரை மரியாதை செலுத்தும் பண்பு அமைந்திருக்கின்றது. மன்னரின் சமயமாக ஹிந்து மதத்தின் பல அம்சங்கள் கலந்த வடிவிலான புத்த மதமே திகிழ்கின்றது.

இன்றும் கூட பாங்காக் நகரில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மன்னர் பூமிபோல் 8ம் ராமா என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் மிக ஆழமான அன்புடன் இவர் விளங்குகின்றார். இவர் மக்கள் நலனுக்காக பல முயற்சிகளைச் செய்தவர். இவரும் இவரது துணைவியாரும், மகளும் உள்ளூர் மக்களால் மிக விரும்பப்படுபவர்கள். சேவை மன்ப்பான்மை மிக மிக அதிகமாக உடையவர்கள். இதில் விதி விலக்காக மன்னரின் மகன் கருதப்படுகின்றார். ஆயினும் பொதுமக்கள், மன்னர், பேரரசியார், இளவரசியார் பெயரில் கொண்டிருக்கும் மதிப்பும் அன்பும் அளவற்றது என்பதை நேரில் நான் அங்கிருந்த பொழுதில் உணர்ந்தேன். குறிப்பாக வடக்கு தாய்லாந்தில் மலைப்பகுதியில் ஒரு பயணத்தின் போது அங்கு ஒரு முறை வந்திருந்த அரசியாரை தெய்வமாக மக்கள் வணங்கி அவரை வரவேற்று  உபசரித்து மக்கள் மகிழ்வித்தார்கள் என்பதைக் கேள்விப்பட்டு ஆச்சரியம் கொண்டேன்.


வாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்

எங்கள் அயோத்தையா பயணத்தில் முதலில் வாட் யாய் சாய் மொங்கோன் சென்றடைந்தோம். அப்போது காலை மணி ஏறக்குறை 10.40 ஆகியிருந்தது. இந்த வாட் யாய் சாய் மொங்கோன் என்ப் பெயர்க் கொண்ட புத்த விகாரை பல வெவ்வேறு பகுதிகளாக அமைந்தவை. ஒவ்வொன்றாகக் காண சற்றே நேரம் எடுக்கும் என்பதால் 10 நிமிடங்கள் எங்களுக்கு விளக்கமளித்து விட்டு 30 நிமிடங்கள் ஆலயத்தை முழுதாகச் சுற்றிப் பார்த்து வர அனுமதி அளித்தார் எங்கள் பயன வழிகாட்டி. ஆலயத்தின் அழகில் நான் என்னை மறந்தேன்!

தொடரும்