Wednesday, August 20, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 1

கருத்தரங்கத்திற்காக இங்கிலாந்தின் தென் கிழக்கு நகரான காண்டபெரி வந்த எனக்கு இந்த நகரின் முழு விபரங்களையும் ஒவ்வொன்றாக அறிந்து கொள்ளும் போது ஆச்சரியத்தில் மூழ்கிப் போகின்றேன். இங்கிலாந்தின் மிக முக்கிய வரலாற்று நகர் காண்டபெரி என்பதும், ரோமன் அரசு இங்கிலாந்தில் இங்கு தாம் முதன் முதலில் தனது ஆட்சியை நிறுவியது என்பதையும், 6ம் நூற்றாண்டில் கெண்ட் நகரின் அரசியார் பெர்தாவின் தேவைக்காக ரோம் நகரிலிருந்து போப் இங்கு செயிண்ட் அகஸ்டின் பாதிரியாரை  அனுப்பி கிறிஸ்துவ மதம் பரவ வழியேற்படுத்தினார் என்பதும் வரலாறு.

இங்கு முதலில் கத்தோலிக்க மதம் பரவ ஆரம்பித்ததும் வழிபாட்டிற்காக தேவாலயம் எழுப்பப்பட்டது. தற்போது இருக்கும் கேத்திட்ரல் 11ம் நூற்றாண்டை சேர்ந்த வடிவம் என்றாலும் இதன் முதல் வடிவம் 6ம் நூற்றாண்டில் இங்கு அமைக்கப்பட்டு கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் பரவ விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று நேரம் கிடைத்தமையால் காலையில் கேத்திட்ரல், ரோமன் அருங்காட்சியகம், ஹெரிட்டேஜ் அருங்காட்சியகம், ஆகியன சென்று பார்த்து தகவல்கள் சேகரித்து வந்தேன்.

ஆர்ச்பிஷப் தோமஸ் பெக்கட் வரலாறு இந்த நகருக்கு மிக முக்கிய மாற்றத்தை 12ம் நூற்றாண்டு முதல் வழங்கியது.

இக்கதையைப் பற்றி விரிவாக தொடர்ந்து சொல்கின்றேன். முதலில் ...

கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு புனித யாத்திரை செல்லும் இடங்கள் எனக் குறிப்பிடும் போது மிக முக்கியமாக அடையாளம் காட்டப்படும் 3 நகரங்கள் ஜெரூசலம், சண்டியாகோ டி கொம்பொஸ்டெலா (ஸ்பெயின்), காண்டெபெரி (இங்கிலாந்து)  ஆகியவை.

தோமஸ் பெக்கட்தான் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மிக முக்கிய புனித யாத்திரை நகராக இந்த நகரம் உருவாகக் காரணமாக இருந்தவர் என்பதோடு தொடங்குகின்றேன்.

இங்கு காணப்படுவது காத்திட்ரலில் ஆர்ச்பிஷப் தோமஸ் பெக்கட் 4 அரச வீரர்களால் (Knights) 1170ம் ஆண்டு கொல்லப்பட்ட இடம்.

தொடரும்..

Tuesday, August 12, 2014

வைல் டெர் ஸ்டாட் நகர் உலா..!

பாடர்ன் உர்ட்டென்பெர்க் மானிலமே பல அழகிய கிராமங்கள் சூழ்ந்ததோர் மானிலம்.

இங்கு பசுமைக்குக் குறைவில்லை. நெக்கார் நதி பாயும் பகுதிகள் மட்டுமன்றி ஆங்காங்கே பல ஓடைகள், ஆறுகள் இங்கே கண்களுக்கு குளிர்ச்சி.

இருவாரங்களுக்கு முன் திலகேஸ்வரி என்னைக் காண வந்திருந்த சமயம் யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம் அழைத்துச் சென்று பின்னர் இந்தச் சிறு கிராமத்தைச் சுற்றி வந்தோம்.

அன்று சீதோஷ்ண நிலையும் எங்கள் உலாவிற்கு ஒத்துழைக்கத் தவறவில்லை.

நடைப்பயணம் முடித்து திரும்பும் வழியில் ஒரு பழமையான மண்டபப்பகுதியில் ஒரு சிலர் பண்டைய கிராமிய உடையணிந்து கூட்டமாகக் கூடி சிறு விருந்து கொண்டாடிக் கொண்டிருந்தனர். அங்கு ஓரமாகச் சென்று அக்கடிடத்தைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பி நடந்து வரும் சமயம் அக்கூட்டத்திலிருந்து ஒருவர் எங்களை அழைத்துக் கொண்டு ஓடிவந்தார். தன்னை இந்தப் பகுதி மேயர் என அறிமுகப் படுத்திக் கொண்டு இன்று ஒரு திருமணம் நடப்பதாகவும் நாங்களும் அந்த விருந்தில் கலந்து கொள்ளலாம் என்றும் கூறி எங்களை வியப்பில் ஆழ்த்தி அழைத்துச் சென்றார்.

மணமக்கள் மட்டுமன்றி வந்திருந்த விருந்தினர் அனைவரும் பிரத்தியேகமாக ஐரோப்பிய கற்கால நாகரிக உடை அணிந்திருந்தனர். அவர்கள் வழங்கிய சிறு உணவை உண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு வாழ்த்து சொல்லி விடைபெற்றுக் கொண்டு அடுத்த ஊருக்கு வாகனத்தில் ஏறி பயணமானோம் நானும் திலகேஸ்வரியும்.

வைல் டெர் ஸ்டாட் பல நூற்றாண்டுகளாக மூலிகை மருத்துவத்திற்குப் புகழ்பெற்று விளங்கிய ஒரு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கிராமம்.  13லிருந்து 16ம் நூர்றாண்டு வரை இங்கே வீட்டு வைத்தியம், புதுமைச் சிந்தனை என முயன்ற பெண்களை விட்சஸ் என்று சொல்லி மரத்தில் கட்டி வைத்து எரியூட்டி கொன்ற நிகழ்வுகள் நடந்தன.

அழகழகான பழமையான வீடுகள், எளிமையான தூய்மையான வீதிகள், கடைவீதிகள்.. ஆங்காங்கே விட்ச்  க்ராஃப்ட் கதைகளை நினைவூட்டும் உருவங்கள், தேவாலயங்கள் என  அழகியதோர் கிராமம் வைல் டெர் ஸ்டாட். பாடன் ஊர்ட்டென்பெர்க் மாகாணம் வருபவர்கள் நிச்சயம் இந்த கிராமத்தை வந்து பார்த்து ரசித்துச் செல்லலாம்.

சில புகைப்படங்கள்..


ஆற்றங்கரை அருகே...​

நகராண்மைக்கழக் கட்டிடம்


ஜொஹான்னஸ்கெப்லர் சிலை


நகர மையத்தில்

நகர மையத்தில்

திருமண நிகழ்வு



திருமண நிகழ்வில் நாங்கள்



நகர மையத்தில்


நகர மையத்தில்



நகர மையத்தில்



நகர மையத்தில்




நகர மையத்தில்












Saturday, August 9, 2014

படம் சொல்லும் தமிழகம் 2014 - 8



2014 ஜூன் தமிழகத்தின் மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில் சாலையில் நான் எடுத்த ஒரு புகைப்படம் இது.

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை பிரச்சாரம் செய்து கொண்டு மாணவர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்.

நண்பகல் 12 வாக்கில் இந்த மாணவர்கள் அணி சென்று கொண்டிருந்தனர். கொளுத்தும் வெயிலில் காலில் காலணி அணியாத  நிலையில் பாதி சிறார்கள்.

தரையின் சூடும் அது தரும் வலியும் அவர்கள் முகத்தில் இல்லை. அணிவகுப்பின் மகிழ்ச்சியே மனதை நிறைத்திருக்கின்றது இவர்களுக்கு.

மாணவர்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றான காலணி அணியும் வழக்கத்தை முறைப்படுத்தி அணிவிக்கும் பழக்கத்தைப் பெற்றோர் மறந்தாலும் ஆசிரியர் வலியுறுத்த வேண்டியது அவசியம் அல்லவா? மாணவர் நலனில் ஆசிரியருக்கும் பொறுப்புண்டே.  மாணவர்களை அணிவகுத்து சாலையில் அழைத்துச் செல்லும் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய அந்தப் பொறுப்பு இங்கே மறைந்து விட்டதே..!

காலணி அணிவது என்பது பேஷணுக்காக அல்ல.. அடிப்படை பாதுகாப்பிற்காக.. எங்கெங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டு செல்லும் மாணவர்கள் தரையில் கிடக்கும் ஏதாகினும் ஒன்றின் மேல் பாதத்தை வைத்து புண்ணாக்கிக் கொண்டால் அது அவர்களுக்கு சுகாதாரக் கேடு என்பதோடு ஏதாகினும் பின் விளைவினையும் கூட ஏற்படுத்தலாம். ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

Sunday, July 27, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 9

ஒன்றை உருவாக்குதல் என்பது எளிதன்று. அதற்கு சிந்தனைத் திறன், செயல்திறன், உருவாக்கத் திறன் ஆகிய அனைத்தும் இணங்கி இயைந்து செயல்பட வேண்டும்.

ஆனால் ஒன்றினை சிதைத்தல் என்பது தான் எவ்வளவு சுலபமான ஒரு  ​காரியமாகி விடுகின்றது?

அயோத்தையா நகரை மன்னர் ராமாதிபோதி 1350ம் ஆண்டில் உருவாக்கினார். அவர் பரம்பரையில் அடுத்தடுத்து வந்தோரும் ஆட்சி செய்தோரும் படிப்படியாக அந்த நகரையே கலைக்கோயில்கள் நிரம்பிய புனித பூமியாக மாற்றினர். திபேத், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் இங்கிருந்து புத்த பிக்குகள் சென்று வருவதும், அந்த நாடுகளில் தங்கியிருந்து புத்த பிக்குகள் பயிற்சி மேற்கொண்டு திரும்பி வந்து உள்ளூரில் பௌத்தம் வளர்ப்பதும் நடைபெற, அயோத்தையா ஏறக்குறைய 300 ஆண்டு செழிப்புடன் கிழக்காசியாவில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது.

1767ம் ஆண்டில் பர்மிய படையினர் தொடுத்த பேர் அயோத்தையாவை முழுமையாக அதன் சிறப்பை இழக்கச் செய்தது.  அரச பரம்பரயினரின் அரண்மனைகளும் அரசாங்க கட்டிடங்களும் முற்றும் முழுவதுமாக இப்போரின் போது அழிக்கப்பட்டாலும் இப்பகுதியில் அமைந்திருக்கும் புத்த ஆலயங்களில் பல  சேதத்தைக் காணவில்லை. ஆயினும் அரண்மனைப் பகுதியைச் சுற்றிலும் உள்ள கலைச்சிறப்பு மிக்க பல விகாரைகள் சிதலமடைந்து இன்றும் இந்த வரலாற்றுப் பேரழிவை நினைவுறுத்திக் கொண்டிருப்பதை இன்றும் அங்கு நாம் செல்லும் போது உணர முடிகின்றது.



அயோத்தையாவில் வாட் யாய் சாய் மொங்கோன் பார்த்த பின்னர் அங்கிருந்து சற்றே அயோத்தையா நகருக்குள் எங்கள் பேருந்து நுழைந்தது. ஆங்காங்கே செங்கற்கோயிற்கள்.. புத்த விகாரைகள்.. அடுத்தடுத்து வரிசையாக சில.. தனியாக நிற்கும் விகாரைகள்.. இவை அனைத்துமே வழிபாட்டுக்கு உகந்த நிலையில் இல்லாது உடைந்து சிதிலமடைந்த நிலையிலேயே இன்றளவும் காட்சியளிக்கின்றன.

பேருந்தை அயோத்தையா ஹெரிட்டேஜ் பார்க் வாயிற் புறத்தில் பேருந்து நிற்கும் இடத்தில் நிறுத்தி விட்டு எங்களை எங்கள் பயண வழிகாட்டி சிதிலமடைந்த அரண்மனைப் பகுதியையும் அதனைச் சுற்றி அமைந்திருக்கும் சேதமடந்த புத்த விகாரைகளையும் பார்த்து வர அழைத்துச் சென்றார்.

சிதலமடைந்த நிலையிலே கூட கண்களைக் கவரும் இந்த கோயில்கள் அதன் சிறப்பு கெடாமல் இருந்தால் இன்னும் காண கண் கோடி வேண்டுமோ என்று எண்ண வைத்தது அங்கு நான் கண்ட காட்சி.

இப்பகுதியில் அமைந்திருப்பதே வாட் ப்ரா சி சன்பெட் புத்த விகாரை. அயோத்தையாவின் மிக முக்கிய வழிபாட்டுத்தலமாக அமைந்திருந்த கோயில் இது. இந்த கோயிலும் அதனைச் சுற்றிய வளாகமும் அமைந்திருக்கும் பகுதி 1350 முதல் 1448 வரை அரசபரம்பரையினர் அதிகாரப்பூர்வ மடாலயமாகத் திகழ்ந்தது. இங்கு குறிப்பாக அமைந்திருக்கும் மூன்று விகாரைகளில் அயோத்தையா அரசர்கள் மூவரின் எரிக்கப்பட்ட பூத உடலின் சாம்பலும் எலும்புகளும் தனித்தனி விகாரைகளில் தகனம் செய்யப்பட்டுள்ளன. இந்த விகாரைகள் முற்றும் முழுதும் சேதம் அடையாத போதும் கூட  கதவுகள் முழுதாக அடைக்கப்பட்டு பார்வையாளர் யாரும் உட்சென்று காண இயலாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன.




இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடம் ஒரு நீள்சதுர அமைப்பில் ஒரு வளாகம் போல அமைந்துள்ளது. இங்கே முன்னர் 16 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்ட புத்தரின் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இச்சிலை செம்பினால் செய்யப்பட்டு  அதன் மேல் பகுதி முழுமையாக தங்கத்தால் போர்த்தப்பட்ட வகையில் அமைக்கப்பட்ட ஒரு சிற்பமாக இது உருவாக்கப்பட்டு வழிபாட்டில் அங்கம் வகித்தது. அயோத்தையா படையினருக்கும் பர்மிய படையினருக்கும் நடைபெற்ற போரின் போது இந்தப் பகுதி அழிக்கப்பட்ட நிலையில் இங்கிருந்த இந்த புத்தர் சிலையை பர்மிய படையினர் அதன் மேல் பகுதி தங்கத்திற்காக இச்சிலையை எரித்து தங்கத்தை எடுத்துக் கொண்டனர்.  மிஞ்சிய செம்பு வடிவ சிற்பம் மட்டும் சேதமின்றி தங்கிவிட இந்தச் சிற்பமே தற்போது அமைக்கப்பட்டுள்ள வாட் போ ப்ரா மஹா சேடி சி சான்பட் ஆலயத்தினுள் ப்ரமாண்டமாக அமைக்கப்பட்டு வழிபாடும் நடந்து வருகின்றது.

தொடரும்..

சுபா

குறிப்புக்கள்
http://www.aseanworldheritage.com/2011/10/city-ayutthaya-historical-park-1.html
http://en.wikipedia.org/wiki/Ayutthaya_Historical_Park

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 8

​ஒன்றை உருவாக்குதல் என்பது எளிதன்று. அதற்கு சிந்தனைத் திறன், செயல்திறன், உருவாக்கத் திறன் ஆகிய அனைத்தும் இணங்கி இயைந்து செயல்பட வேண்டும்.

ஆனால் ஒன்றினை சிதைத்தல் என்பது தான் எவ்வளவு சுலபமான ஒரு  ​காரியமாகி விடுகின்றது?

அயோத்தையா நகரை மன்னர் ராமாதிபோதி 1350ம் ஆண்டில் உருவாக்கினார். அவர் பரம்பரையில் அடுத்தடுத்து வந்தோரும் ஆட்சி செய்தோரும் படிப்படியாக அந்த நகரையே கலைக்கோயில்கள் நிரம்பிய புனித பூமியாக மாற்றினர். திபேத், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் இங்கிருந்து புத்த பிக்குகள் சென்று வருவதும், அந்த நாடுகளில் தங்கியிருந்து புத்த பிக்குகள் பயிற்சி மேற்கொண்டு திரும்பி வந்து உள்ளூரில் பௌத்தம் வளர்ப்பதும் நடைபெற, அயோத்தையா ஏறக்குறைய 300 ஆண்டு செழிப்புடன் கிழக்காசியாவில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது.

1767ம் ஆண்டில் பர்மிய படையினர் தொடுத்த பேர் அயோத்தையாவை முழுமையாக அதன் சிறப்பை இழக்கச் செய்தது.  அரச பரம்பரயினரின் அரண்மனைகளும் அரசாங்க கட்டிடங்களும் முற்றும் முழுவதுமாக இப்போரின் போது அழிக்கப்பட்டாலும் இப்பகுதியில் அமைந்திருக்கும் புத்த ஆலயங்களில் பல  சேதத்தைக் காணவில்லை. ஆயினும் அரண்மனைப் பகுதியைச் சுற்றிலும் உள்ள கலைச்சிறப்பு மிக்க பல விகாரைகள் சிதலமடைந்து இன்றும் இந்த வரலாற்றுப் பேரழிவை நினைவுறுத்திக் கொண்டிருப்பதை இன்றும் அங்கு நாம் செல்லும் போது உணர முடிகின்றது.



அயோத்தையாவில் வாட் யாய் சாய் மொங்கோன் பார்த்த பின்னர் அங்கிருந்து சற்றே அயோத்தையா நகருக்குள் எங்கள் பேருந்து நுழைந்தது. ஆங்காங்கே செங்கற்கோயிற்கள்.. புத்த விகாரைகள்.. அடுத்தடுத்து வரிசையாக சில.. தனியாக நிற்கும் விகாரைகள்.. இவை அனைத்துமே வழிபாட்டுக்கு உகந்த நிலையில் இல்லாது உடைந்து சிதிலமடைந்த நிலையிலேயே இன்றளவும் காட்சியளிக்கின்றன.

பேருந்தை அயோத்தையா ஹெரிட்டேஜ் பார்க் வாயிற் புறத்தில் பேருந்து நிற்கும் இடத்தில் நிறுத்தி விட்டு எங்களை எங்கள் பயண வழிகாட்டி சிதிலமடைந்த அரண்மனைப் பகுதியையும் அதனைச் சுற்றி அமைந்திருக்கும் சேதமடந்த புத்த விகாரைகளையும் பார்த்து வர அழைத்துச் சென்றார்.

சிதலமடைந்த நிலையிலே கூட கண்களைக் கவரும் இந்த கோயில்கள் அதன் சிறப்பு கெடாமல் இருந்தால் இன்னும் காண கண் கோடி வேண்டுமோ என்று எண்ண வைத்தது அங்கு நான் கண்ட காட்சி.

இப்பகுதியில் அமைந்திருப்பதே வாட் ப்ரா சி சன்பெட் புத்த விகாரை. அயோத்தையாவின் மிக முக்கிய வழிபாட்டுத்தலமாக அமைந்திருந்த கோயில் இது. இந்த கோயிலும் அதனைச் சுற்றிய வளாகமும் அமைந்திருக்கும் பகுதி 1350 முதல் 1448 வரை அரசபரம்பரையினர் அதிகாரப்பூர்வ மடாலயமாகத் திகழ்ந்தது. இங்கு குறிப்பாக அமைந்திருக்கும் மூன்று விகாரைகளில் அயோத்தையா அரசர்கள் மூவரின் எரிக்கப்பட்ட பூத உடலின் சாம்பலும் எலும்புகளும் தனித்தனி விகாரைகளில் தகனம் செய்யப்பட்டுள்ளன. இந்த விகாரைகள் முற்றும் முழுதும் சேதம் அடையாத போதும் கூட  கதவுகள் முழுதாக அடைக்கப்பட்டு பார்வையாளர் யாரும் உட்சென்று காண இயலாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன.



இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடம் ஒரு நீள்சதுர அமைப்பில் ஒரு வளாகம் போல அமைந்துள்ளது. இங்கே முன்னர் 16 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்ட புத்தரின் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இச்சிலை செம்பினால் செய்யப்பட்டு  அதன் மேல் பகுதி முழுமையாக தங்கத்தால் போர்த்தப்பட்ட வகையில் அமைக்கப்பட்ட ஒரு சிற்பமாக இது உருவாக்கப்பட்டு வழிபாட்டில் அங்கம் வகித்தது. அயோத்தையா படையினருக்கும் பர்மிய படையினருக்கும் நடைபெற்ற போரின் போது இந்தப் பகுதி அழிக்கப்பட்ட நிலையில் இங்கிருந்த இந்த புத்தர் சிலையை பர்மிய படையினர் அதன் மேல் பகுதி தங்கத்திற்காக இச்சிலையை எரித்து தங்கத்தை எடுத்துக் கொண்டனர்.  மிஞ்சிய செம்பு வடிவ சிற்பம் மட்டும் சேதமின்றி தங்கிவிட இந்தச் சிற்பமே தற்போது அமைக்கப்பட்டுள்ள வாட் போ ப்ரா மஹா சேடி சி சான்பட் ஆலயத்தினுள் ப்ரமாண்டமாக அமைக்கப்பட்டு வழிபாடும் நடந்து வருகின்றது.

தொடரும்..

சுபா

குறிப்புக்கள்
http://www.aseanworldheritage.com/2011/10/city-ayutthaya-historical-park-1.html
http://en.wikipedia.org/wiki/Ayutthaya_Historical_Park

Thursday, July 3, 2014

படம் சொல்லும் தமிழகம் 2014 - 3

மண் வீடு ...சென்ற ஆண்டு ஒரு நண்பர் மாலன் அறிமுகப்படுத்திய அழகிய உணவகம். இந்த ஆண்டும் சென்று வர ஆவல் ஏற்பட்டதால் பேரா.நாகராசனும், பேரா.தெய்வசுந்தரமும் மதிய உணவுக்கு எங்கே போகலாம் என்ற உடனேயே அடையாரில் மண் வீடு என்று சொல்லி விட்டேன்.முதலில் மணல் வீடு என்று சொல்லி குழப்பியதில் ..அவர்கள் தேடினால் மணல் வீடு என்ற பெயரையே டைரக்டரியில் காணவில்லை. பின்னர் நண்பரைக் கேட்டு சரி செய்து மண் வீடு என அறிந்து தேடினால் முன் வீடு என இணையம் காட்ட.. இல்லை அது மண் வீடு என அறிந்து அங்கு சென்று மதிய உணவு சாப்பிட்டோம்.

முருங்கை இலை தக்காளி ரசம் ஸ்டார்ட்டர்..கொஞ்சம் காரமாக இருந்தாலும் ம்ம்ம் சுவை பிரமாதம்..

பிறகு பதிய உணவு.. காரக் குழம்பு .. முருங்கை இலை பருப்பு கூட்டு, வாழைப்பு வடை என எல்லாம் சுவையில் ப்ரமாதம்.

Tuesday, July 1, 2014

படம் சொல்லும் தமிழகம் 2014 - 2



வைகை ஆற்றைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். மானாமதுரை... திருப்பாச்சேத்தி... அப்படியே திருப்பூவனம் வரும் போது பெரிய பாலத்தை இருமுறை கடந்து வாகனத்தில் பயணித்து வரும் போது வைகை இதோ என்று நண்பர்கள் சொல்ல,  எட்டிப் பார்த்தால்.. நீரில்லா வைகை தான் கண்களுக்கு புலப்பட்டது.

ஆற்றிலே நீரோடு உன்னை  மீண்டும் காண வேண்டும் வைகையே!

சுபா