Tuesday, July 3, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 10

சாண்டா க்ரூஸ் - மனதில் நிற்கும் சில காட்சிகள்


சாண்டா க்ரூஸ் துறைமுகம் - நீல வானும் நீல கடற்கரையும்...

பெட்டூனியா மலர்களும் வேறு சில மலர்களைத் தாங்கிய பூச்செடிகளும்  வீடுகளை அலங்கரிக்கின்றன


சாலையோரத்து வீடுகள், பால்கனியில் தொங்கும் பூக்கள் - இவை சாலையை சோலையாக்குகின்றன..


சுபா - சண்டா க்ரூஸ் நகர மைய சாலையில்.. சியாஸ்டா நேரத்தின் போது. சாலையே வெறிச்சோடிப் பொய் விடுகின்றது சியாஸ்டா நேரத்தில்.. மக்கள் மதிய ஓய்வு எடுக்கும் போது கடைகள் 2 மணி நேரங்களுக்கு மூடப்படுவதால் ஆட்கள் நடமாட்டம் சாலையில் மிகக் குறைவே.. 

உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. சாலையோரம் அமர்ந்து மக்கள் உணவருந்திக் கொண்டும் ஓய்வெடுத்துக் கொண்டும் இருக்கும் காட்சி





ஒரு உணவகம்.. கனேரித் தீவின் கட்டிடக் கலையைப் பிரதிபலிப்பதாக


சுபா - சாண்டா க்ரூஸில்


ஒரு வீட்டின் வாசல் பகுதி. கதவில் மாட்டப்பட்டிருக்கும் மாதா படத்தின் காட்சி ஆசிய நாடுகளில் மக்கள் வீட்டு வாசலில் சுவாமிப் படங்களை மாட்டி தொங்க விட்டிருப்பதைப் போன்றே அமைந்துள்ளது.


சாண்டா க்ரூஸ் - நகரின் மையப் பகுதி.. கட்டிடங்கள் சாலை ஓரத்தில்..அவற்றின் அமைப்பு..


எல் சல்வடோர் தேவாலயம்


எல் சல்வடோர் தேலாயத்திற்கு முன் புறம் மலரால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிலுவை (ஒரு புறம் முழுதும் மஞ்சள் நிறப் பூக்கள்)

அதே சிலுவையின் மறு புறம் முழுதும் சிவப்பு நிற மலர்களால் அலங்காரம்..

தொடரும்..

சுபா













No comments:

Post a Comment