Tuesday, September 5, 2017

ரைன் நதிக்கரையில் - 5

ரைன் நதிக்கரையில்.. மீண்டும் நான்
நதி அதன் இயல்பான சலனத்துடன் பயணிக்கிறது
தாயகத்தில் உற்ற நண்பர்கள் தாக்கப்பட்ட செய்தியின் சோகம்
மனதில் நிறைந்து வழிகிறது.
சமூகத்துக்கு நன்மை செய்ய நினைப்போர்
பலம் படைத்தவர்களால் தாக்கப்படுதல்
தொடரும் நிகழ்வு..
நடக்கின்ற நிகழ்வுகள் ஏற்படுத்தும்
மனக் காயங்கள்..
ஒன்றன் தொடர்ச்சியாக மற்றொன்று
இந்த சிந்தனைகளிலிருந்து வெளிவராது
புறக்காட்சியைக் காண விரும்பா மனத்துடன்
அகக்காட்சியில் மூழ்கி..
நடக்கின்றேன் நான்
-சுபா


No comments:

Post a Comment