Tuesday, August 1, 2017

ரைன் நதிக்கரையில் - 3


மீண்டும் ரைன் நதிக்கரையில் நான்...

அது என்னை ஈர்க்கிறதா, நான் அதனை ஈர்க்கின்றேனா, என்ற சிந்தனையுடன்..

சிலர் ஜோகிங் செய்து கொண்டிருக்கின்றனர்..

இளைஞர்கள் முகமெல்லாம் புன்னகையாக அரட்டையில் மூழ்கியிருக்கின்றனர்..

இளம் பெற்றோர் குழந்தைகளுடன் நடக்கின்றனர்..

காதலர்கள் இயற்கையை ரசித்துக் கொண்டு அவர்கள் உலகில் சஞ்சரிக்கின்றனர்..

கப்பல்கள் என் நடையை மிஞ்சும் வேகத்துடன் இருபுறமும் பயணிக்கின்றன..

வாத்துகளும், மைனாக்களும் உணவு தேடித் திரிகின்றன...

ரைன் அதன் இயல்பான சலனத்துடன் ஓடிக் கொண்டிருக்கின்றது.
....இவற்றை வாசித்தவாறு நான் நடக்கின்றேன் சற்றே தணிந்த காய்ச்சலுடன்.

குறிப்பு: நலம் விசாரித்த அனைத்து தோழர்களுக்கும் சகோதர சகோதரியருக்கும் என் மனமார்ந்த நன்றி. காய்ச்சல் வந்தால் ஒரு வாரம் சிரமப்படத்தானே வேண்டும்..