Friday, December 16, 2011

நுர்ன்பெர்க் லேப்கூகன் (Lebkuchen)

ஜெர்மனியில் பாயான் மாநிலத்தின் ஒரு முக்கிய நகரம் நுர்ன்பெர்க். கடந்த சில மாதங்கள் அங்கே பணி நிமித்தமாக வாசம் செய்யும் நிலை எனக்கு. நுர்ன்பெர்க் கிறிஸ்மஸ் மார்க்கெட் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று. உலகின் பல மூலைகளிலிருந்து இங்கே இந்தச் சந்தையைப் பாக்க வருபவர்கள் பலர். நகரில் ஏறக்குறைய எல்லா தங்கும் விடுதிகளும் முழுதும் புக் செய்யபப்ட்டு விட்டன சுற்றுலா பயணிகளால். நான் தொடர்ந்து புக் செய்து வைத்திருந்ததால் எனக்கு பிரச்சனை இல்லாமல் போனது தங்கிக் கொள்ள.
சரி ..கிறிஸ்மஸ் சந்தைக்கு வருவோமே..

ஐரோப்பாவின் 10 சிறந்த கிற்ஸ்மஸ் சந்தைகளில் இதுவும் ஒன்று. http://www.travelintelligence.com/travel-writing/europe-s-top-10-christmas-markets பார்க்க!

இந்த கிறிஸ்மஸ் சந்தையின் அழகிய காட்சிகளின் புகைப்படங்களை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த சந்தைக்கு சிறப்பு சேர்க்கும் மிக முக்கிய அம்சமான லேப்கூகன் (Lebkuchen) படங்கள் மட்டும் இன்று பதிகின்றேன்.


வாங்கி வைத்து தட்டில் வைக்கப்பட்ட லேப் கூகன்.




லேப் கூகன் ... சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



லேப் கூகன் விற்பனை செய்யும் கூடாரம்.. அலங்கரிக்கபப்ட்டிருக்கும் விதம் கண்களைக் கவர்ந்தது.


சரி லேப்கூகன் எப்படி செய்கிறார்கள் என தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு :http://germanfood.about.com/od/baking/r/nuernberger_lebkuchen.htm

நாளை முடிந்தால் சந்தையின் படங்களுடன் வருகிறேன்.

சுபா

Saturday, December 3, 2011

திருவண்ணாமலை நினைவுகள்

திருவண்ணாலைக்குப் பயணம் செய்த போது அங்கு பதிவு செய்த சில காட்சிகள் - சிறு விளக்கங்களுடன்.


சென்னையிலிருந்து புறப்படும் போது சாலையில் இடையே நடந்து செல்லும் மாடுகளும் கன்றுக் குட்டிகளும். இவை சாலை நெரிசலைப் பற்றிய கவலையின்றி, மெதுவாக செல்வது வாகனமோட்டுபவருக்கு சிரமத்தைத் தந்தாலும் இவையும் மக்களோடு சேர்ந்து அவற்றின் வேலைகளை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு சாலையை மறைத்துக் கொண்டு நடப்பது என்னைப் போன்ட் சுற்றுப் பயணிகளுக்கு கண்களுக்கு விருந்து.

செங்கல்பட்டு செல்லும் வழியில் அமைந்திருக்கும் விருந்தினர் ஓய்வு விடுதி. இங்கு காலை உணவு சாப்பிட்டு பயணித்தோம்.

மூன்று பெண்களும் காலை உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கிறோம்.. பொங்கல் இட்டலி காப்பி.. வடை.. நல்ல காலை உணவு விருந்து.

செல்லும் வழியில்.. செஞ்சிக் கோட்டைக்கு முன்னே..நான்!




நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்த விருந்தினர் மாளிகை. நேர்த்தியான தூய்மையான கட்டிடம். ரமணாஸ்ரமத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.

சீதாம்மா கொடுத்த நூலை வாசித்து திருவண்ணாமலை சிறப்புக்களை தெரிந்து கொள்கிறேன்.

திட்டம் போட வேண்டாமா..? எங்கு முதலில் செல்வது..? எப்போது புறப்படுவோம் என ஆலோசனை நடக்கின்றது.




செங்கம், செல்லும் சாலையில்.. இருவர் ஒரு மாட்டை மோட்டார் சைக்கிளில் வைத்து ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். எதற்காக .. தெரியவில்லை!



புரிசைக்கு செல்லும் வழியில் வரிசையாக மகளிர் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர்.. ஏதாவது மகளிர் மாநாடாக இருக்குமோ ?

வண்ண வண்ண சேலையில் பெண்கள்.

புரிசை கிராமத்து ஆண்கள்.. ஓய்வு நேரத்தில் தாயம் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அருகில் நெல்லை கொட்டி காய வைத்திருக்கின்றனர்.

மகளிர் புரிசை கிராமத்து சிவன் கோயிலின் வாசலை கோலம் போட்டு அழகு செய்கின்றனர் அந்த மாலை வேளையில்.

இந்தப் பெண் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த கோலத்தை போட்டு மகிழ்கின்றனர்.

புரிசை கிராமத்து தேனீர் கடை.


புரிசை கிராமத்து இளம் சிறார்கள்.. காலில் மண்.. முகமெல்லாம் புன்னகை.. தங்களை நான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை நான் மறுக்காமல் எடுத்துக் காட்டினேன். படத்தைப் பார்த்து அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி.


புகைப்படம் எடுக்கனும்னா இப்படியா வெட்கப்படுவது சீத்தாம்மா..? :-)

திருவண்ணாமலை பதிவுகள்

திருவண்ணாமலை பதிவுகள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே உள்ளன.

[மின்தமிழ் மடலாடற் குழுவில் இப்பதிவுகளையும் கேள்விகள் இவை தொடர்பான கலந்துரையாடல்களை இங்கே காணலாம். ]

திருவண்ணாமலை பதிவுகள் வெளியீடுகளின் வழி எனது 2011 மார்ச் மாத தமிழக பயணத்தின் போது நான் பதிந்து வந்த தகவல்களை தயாரித்து தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்த்தில் இணைத்து வைத்துள்ளதோடு உங்களிடமும் பகிர்ந்து கொண்டேன். உங்களின் பின்னூட்டங்களும் கேள்விகளும் பதில்களும் ஊக்கமளிப்பவையாக இருந்தன. நமது வலைத்தளத்திலும் திருவண்ணாமலைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சில இடம்பெற இந்த முயற்சி உதவி உள்ளது.

இந்தப் பதிவின் தொடரை இத்துடன் நிறைவு செய்ய விரும்புகிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் இவ்வளவு தானா என நினைத்து விட வேண்டாம். எனது பதிவுகள் நிறைவு பெற்றாலும் தொடர்ந்து சில பதிவுகளையும் குறிப்புக்களை அவ்வப்போது நாம் இணைத்து வரலாம்.

எனது பயணத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் இப்பகுதிக்குச் சென்று சில பதிவுகளை ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்களுடன் திரு.உதயன், திரு.துரை திரு.ப்ரகாஷ் ஆகியோர் சென்று கேட்டு தகவல் பெற்று வந்துள்ளனர். அந்தத் தகவல்களையும் பதிய வேண்டும். அதுமட்டுமல்லாது மின் தமிழ் வாசகர்கள் நீங்கள் உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செல்லும் வாய்ப்பு அமைந்தால் அங்கு நீங்கள் காணும் வரலாற்று விஷயங்களைப் பதிந்து வந்து இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்பயணத்தின் போது என்னுடன் உடனிருந்து உதவிய நண்பர்களின் அன்பையும் ஆதரவையும் மறக்க முடியாது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் குடும்பத்தினரின் இணைந்த பணி இது என்றாலும் எனக்கு மன நிறைவளிக்கும் வகையில் பயணத்திலும் உதவிய இவர்களை மீண்டும் நினைத்துப் பார்த்து நன்றி கூற விரும்புகிறேன்.



எங்களை சென்னையிலிருந்து திருவண்ணாமலை அழைத்துச் சென்று பயணத்தில் கூடவே இருந்து வாகனமோட்டி உதவி செய்தவர் இவர். ஒரு முன்னாள் ராணுவ வீரர்.

அவ்வப்போது ஏதாவது வித்தியாசமான விஷயங்களை நான் பார்த்து விட்டால் வாகனத்தை நிறுத்தச் சொல்லி கேட்டுக் கொள்வேன். சலிக்காமல் வாகனத்தை நிறுத்தி நான் புகைப்படங்கள் எடுத்து முடித்து வரும் வரை காத்திருந்து அழைத்துச் சென்றார்.


ஒரு சமயம் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது வாகனத்தை நிறுத்தி என்னிடம் தன்னை ஒரு படம் எடுக்க முடியுமா எனக் கேட்டார். அந்தப் படம் தான் நீங்கள் இங்கே பார்ப்பது.

இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ப.கிருஷ்ணன் அவர்களின் உருவச்சிலை. இங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு அவருக்கு இராணுவ முறையில் வணக்கம் தெரிவித்தார். பின்னர் ஒரு புகைப்படம் எடுக்கச் சொல்லி கேட்டுக் கொண்டார். அவரது நாட்டுப் பற்று மனதை நெகிழ வைத்தது.


திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டர் டாக்டர்.ம.ராஜேந்திரன் (மார்ச் 2011). எங்கள் பயணத்தின் பதிவுகளுக்கான எல்லா உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாது எங்களை வீட்டிற்கு அழைத்து அருமையான விருந்தும் பரிமாறினார். இவரது அன்பான துணைவியாரின் மதுரை நகர சமையலின் காரத்தை ரசித்து ருசித்து சாப்பிட்டேன். இவரது மகள் வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட குழந்தை. திறமை மிக்கவள். இவர்கள் இனிதே பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


திருமதி.புனிதவதி இளங்கோவன். எங்களுடன் பயணத்தில் இணைந்து கொண்டவர். எனது பேட்டிகளின் போது பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பி பதிவுகள் சிறப்பாக வந்திட துணை புரிந்தார். இவர் ஒரு தகவல் பொக்கிஷம். சைவ சித்தாந்தம் தேவாரத் திருமுறைகள், வரலாறு, பெண்ணியம் என பல துறை வல்லுனர். முன்னாள் தமிழ்நாடு ஆல் இந்தியா ரேடியோ இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது நட்பு கிடைத்ததில் நான் மனம் மகிழ்கிறேன்.


அட்வகேட் ஷங்கர். நான் எதிர்பார்க்காத நேரத்தில் எங்களுடன் இணைந்து கொண்டு திருவண்ணாமலை கோயிலைப் பற்றிய நல்ல அறிமுகத்தை எனக்கு வழங்கினார். இவரை அறிமுகம் செய்து கொண்டதில் மிகவும் மகிழ்கிறேன்.

ப்ரகாஷ் சுகுமாரன். மின்தமிழில் எனக்கு அறிமுகமாகி சீத்தாம்மா வழியாக நல்ல நட்பாக உறுவாகி இருப்பவர். என்னை சென்னையிலிருந்து அழைத்துச் சென்று கூடவே இருந்து எல்லா உதவிகளையும் செய்து கொடுத்து பல செய்திகளை அவ்வப்போது வழங்கிக் கொண்டும் இருப்பவர். நன்றி ப்ரகாஷ்.


ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நான் செல்ல காரணமாக இருந்தவர். இவரது ஆக்கமும் ஊக்கமும் எனது இயற்கையான வேகத்தை மேலும் அதிகப் படுத்தும் தன்மை கொண்டது. இவரது துணையுடன் மேலும் பல பதிவுகள் இன்னமும் செய்வோம்.

சீதாம்மா - மீண்டும் தமிழகம் வரும் போது மீண்டும் இணைந்து சில காரியங்களை நாம் செய்ய வேண்டும். செய்வோம். உங்களுக்கு இறைவன் திடமான உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்க வேண்டும் என்று ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
சுபா