Saturday, February 18, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 6

சில விஷயங்கள் முதல் முறையே நன்றாக அமைந்து விட்டால் அதில் ஒரு பிடிப்பு வந்து விடுகின்றது. அப்படித்தான் எனக்கு.. கத்தரிக்காய் வாங்கி பாத் செய்து பார்த்து முதல் முறையே என் உள்ளம் கவர்ந்த வகையில் சுவை அமைந்ததால் அந்த ரெசிப்பியை இன்னமும் மறக்கவில்லை. அதோடு அவ்வப்போது நினைத்தால் உடனே செய்து சாப்பிடவும் இந்த ரெசிப்பி சுலபமானதாக எனக்கு அமைந்து விட்டது.

ஆனால் இந்தப் பாயாசம் செய்வது மட்டும் எனக்கு ஏனோ இது வரை கை வராத கலையாகவே இருக்கின்றது. அதிலும் பால் பாயாசம்.

கடந்த சில ஆண்டுகளில் ஓரிரு முறை பால் பாயசம் செய்து அந்த முயற்சி பலனளிக்காது என்று சொல்லி கை விட்டு விட்டேன். எனக்கு ஞாபகம் இருப்பது ஒரு முறை நான் செய்த கடலை பருப்பு பாயசம்.. அது மட்டுமே நானே விரும்பி சாப்பிடும் வகையில் அமைந்தது. ஆனால் மீண்டும் செய்யவில்லை. ஏனோ.. அதற்கு நேரம் காலம் சரியாக அமைய வேண்டும் போல..!

சென்னையில் அன்னலக்‌ஷ்மி ரெஸ்டாரெண்டில் நல்ல சுவையான பாயசம் சாப்பிட்டிருக்கின்றேன். மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிட்ட அந்தப் பாயசத்தின் சுவை இன்னமும் மறக்கமுடியாது.

கிருஷ்ணகிரிக்குச் சென்றிருந்த போது ஒரு பாயசம் இப்படி கிடைத்தது. நம் செல்வமுரளியின் அம்மா ஒரு பாசிப்பயிறு தேங்காய் கலந்த ஒரு பாயசம் செய்திருந்தார். நான் மட்டுமில்லை. எங்களுடன் வந்திருந்த ஸ்வர்ணாவிற்கும் இந்தப் பாயசம் மிகப் பிடித்து விட்டது. நான் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்துச் சாப்பிட்டேன். அப்படி ஒரு சுவை. நன்றாக வெந்த பருப்பு அதில் தேங்காய் சர்க்கரையோ அல்லது வெல்லமோ.. வேறு என்னென்ன கலந்திருந்தார்கள் என்று தெரியவில்லை.. நினைத்தாலே மீண்டும் சாப்பிடத் தோன்றும் பாயசம்..!



செல்வமுரளியின் பெற்றோர்கள்


சுபா

1 comment:

ரத்தினகிரி said...

பாசிப்பயறு பாயசம் சுவையானது மட்டுமல்ல. உடலுக்கும் நல்லது. அதுவும் அன்புடன் அம்மா கையால் செய்தது என்றால் கேட்கவா வேண்டும்?

Post a Comment