Sunday, October 29, 2017

மலேசியா இன்று - 2

Subashini Thf updated her cover photo.
5 mins
மலேசியா இன்று!
கோலாலம்பூர் விமான நிலையத்தில் கேஎல்எம் விமானம் தரையிறங்கிய போது 31 டிகிரி செல்சியஸ். மழை தூரல்.
எனது பயணப் பையை 1 மணி நேரத்திற்குப் பின்னர் தான் பார்க்க முடிந்தது. காணாமல் போய்விட்டு மீண்டும் கிடைத்தது. நல்ல வேளை. தொலைந்து விட்டதோ என்ற கவலை மனதில் இருக்க அந்த வேளையில் பயணப்பை கிடைத்ததில் அலுப்பும் கவலையும் தீர்ந்தது. 
விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கட் எடுத்துக் கொண்டு துரித ரயிலில் பயணித்தேன். வழியெங்கும் பச்சைப் பசேலென செம்பனைக் காடுகள்.
செம்பனைக் காடுகளையும் தமிழர்களையும் பிரிக்க முடியாது. தோட்டத்தொழிலாளர்களாகk காடுகளை அழித்து வளம் கொழிக்கும் செம்பனையைப் பயிரிட்ட உழைப்பாளி வர்க்கம் நம் தமிழ் மக்கள். மலேசியாவின் பொருளாதாரத்தை கட்டமைத்து சீரமைத்ததில் தமிழ் மக்களின் பங்கு மிக அதிகம்.
நண்பர்கள் சந்திப்பு... உரையாடல்.. இப்படி மாலைப் பொழுது இனிதே கழிகின்றது.
உள்ளூரில் அரசியல் செய்திகளே அதிகம் காதில் விழுகின்றன. விரைவில் தேர்தல் வரவேண்டும். நாளிதழ்களில் தேர்தல் தொடர்பான செய்திகள், கூட்டனி அமைத்தல் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
-சுபா

No comments:

Post a Comment