Thursday, March 24, 2011

மீண்டும் தமிழகம் 25.02 - 14.03.2011

தமிழகத்துக்கு எனது 8-வது பயணம் இது. முழுதும் தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டங்களுக்காக நான் ஏற்பாடு செய்திருந்த பயணம் இது. இந்தப் பயணத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களைச் சந்திப்பது ஒரு முக்கிய அங்கம் என்ற போதிலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு நிகழ்த்திய ஓலைச்சுவடி தேடல் நடவடிக்கை தொடர்பான விஷயங்கள் தொடர்பாகவும், சில களப்பணிகளுக்காகவும் இந்த 16 நாள் பயணத்தைத் திட்டமிட்டிருந்தேன்.

எனது கடந்த சில பயணங்களில் நான் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் வழி பயணிப்பது வழக்கம். ஏறக்குறைய 12-14 மணி நேரத்தில் தமிழகத்தில் இருக்கலாம். ஆனால் இந்த முறை கொஞ்சம் மாறறம் செய்கிறேன் என்று எடுத்த முயற்சி அலுப்பு தரும் அனுபவத்தை ஏற்படுத்தி விட்டது. ஸ்டுட்கார்ட்டிலிருந்து லண்டன் ஹீத்ரோ சென்று அங்கிருந்து பின்னர் மும்பாய் சென்று பின்னர் அங்கிருந்து சென்னை. ஏறக்குறைய ஒன்றரை நாள் பயணத்திலேயே வீணாகிப் போனது.

மும்பாயில் 6 மணி நேரங்கள் எனக்கு இருந்ததால் விமான நிலையத்தை விட்டு வெளியேறி ஓரளவு அருகாமையில் உள்ள இடங்களைப் பார்க்கலாம் என நடக்கத் தொடங்கினேன். விமான நிலையம் பெரிதாக்கப்படுகின்றது. ஆனாலும் விமானத்தை விட்டு வெளியே வந்ததும் முதலில் தென்படுவது வரிசை வரிசையான சேரியும் கொட்டிக் கிடக்கும் குப்பை மூட்டைகளும் தான். குடிசை வீடுகள், தண்ணீர் தேங்கிக் கிடக்கும் சேற்றுப் பகுதி, குப்பை மலைகள். இவை மாறவே மாறாதா என நினைத்து அலுப்புத் தான் தோன்றுகிறது.

மும்பை விமான நிலையம் (விமானத்துக்கு முன்னால் சேரி)

மும்பாயில் சாலைகளில் நடந்து பின்னர் அங்கேயே பக்கத்தில் இருந்த பாலாஜி உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டேன். ஜீரா ரைஸ்,வெண்டைக்காய் வருவல். நல்ல ருசி. உணவகம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் மேசையில் இருந்த விரிப்பை பார்த்த போது சாப்பிட சற்று தயக்கம் தான் ஏற்பட்டது. கொஞ்சம் இதிலும் கவனம் எடுத்தால் திருப்தியான ஒரு உணவகம் இது என்று நிச்சயம் சொல்வேன். அன்று உணவகத்தில் சாப்பிட வந்தவர்களை விட ஊழியர்கள் அதிகமாக இருந்தனர். சிறிய உணவகம் தான். ஏறக்குறைய 40 பேர் அமரக்கூடிய ஒன்று. பரிமாறும் பணியாட்கள் மட்டும் 20 பேர் இருப்பார்கள்.

பாலாஜி உணவகத்தில்

மாலை 6:30க்கு சென்னை செல்ல வேண்டிய விமானம். பல்வேறு பிரச்சனைகளைக் காரணம் காட்டி இரவு 9 மணிக்குத்தான் புறப்பட்டது. நான் பயனித்த விமானத்தில் தமிழக சினிமா நடிகை ஒருவரும் பயனித்தார். அதனால் விமானத்தில் வந்தவர்கள் பலரது முகத்தில் தாமதம் ஏற்படுத்திய களைப்பு சற்று குறைந்து புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடம்

ஒரு வழியாக சென்னை அடைய இரவு 10:45 மணி ஆகிவிட்டது.

சென்னையில் எனது இரண்டாம் நாள் அதாவது 27.02. 2011 தமிழ் மரபு அறக்கட்டளை சென்னை நண்பர்களை பார்ப்பதாக அமைத்திருந்தேன். அது முடித்து மாலை திருமதி சீத்தாலட்சுமியுடன் ஞானியின் நாடகம் பார்க்கச் சென்றிருந்தேன். வியக்க வைத்த நடிப்புத் திறனுடன் பலர் இவ்வகை கலைகளில் இன்னமும் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியளித்தது.

28.02.2011 - இன்று சில சந்திப்புக்கள். மாலை தஞ்சாவூருக்கு ரதி மீனா பஸ் வழியாகப் பயணம். என்னுடன் முனைவர்.பத்மாவதியும் இனைந்து கொண்டார்.
01.03 -02.03.2011 - தஞ்சையில் - தாராசுரம் பயணம், நாகப்பட்டினம் பயணம், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் பார்வையிடல்.
03.03.2011 - தமிழ்ப் பல்க்லைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளைக்குப் பாராட்டு, ஓலைச்சுவடிகள் அன்றும் இன்றும் கருத்தரங்கம். எனது சிறப்பு சொற்பொழிவு அறைய திறப்பு விழாவில் ஏற்பாடாகியிருந்தது.
04.03.2011- திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை பயணம். மாலை நண்பர்கள் சந்திப்பு.
05.- 06.03.2011 - சென்னையில் தமிழ் மரபு அறக்கட்டளை பணிகள்
07.03.2011 - திருவண்ணாமலை பயணம் (திருமதி. சீதாலட்சுமி, திருமதி.புனிதவதி ஆகியோருடன்). காலை 7 மணி வாக்கில் பிரகாஷ் வாகனத்துடன் சென்னை வந்து எங்களை அழைத்துச் செல்வதாகத் திட்டம்.
07-08.03.2011 - திருவண்ணாமலை, புரிசை, செங்கம் ஒஅகுதிகளுக்குப் பயணம்.
09.03.2011 - சென்னையில். மாலை ராஜபாளையம் பயணம்.
10.03.2011 - ராஜபாளையம், கோவில்பட்டி, தூத்துக்குடி
11.03.2011 - தூத்துக்குடி, மாலை சென்னை திரும்புதல்
12.03.2011 - சென்னையில் (ஜெயா தொலைக்காட்சி பேட்டி)
13.03.2011 - தமிழ் மரபு அறக்கட்டளை 10ம் ஆண்டு விழா
14.03.2011 - காலை சென்னையிலிருந்து மீண்டும் ஜெர்மனி பயணம்.. சென்னையிலிருந்து மும்பாய்.. மும்பாயிலிருந்து லண்டன் ஹீத்ரோ, லண்டனிலிருந்து ஸ்டுகார்ட். ..

இந்த பயணத்தின் குறிப்புக்களை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்திலும் சில குறிப்புக்களை எனது வலைப்பூக்களிலும் இணைக்க நினைத்துள்ளேன்.

1 comment:

Vassan said...
This comment has been removed by the author.

Post a Comment