Saturday, June 28, 2014

படம் சொல்லும் தமிழகம் 2014 - 1

படங்கள் சொல்லும் செய்தி என்பது மனித மனதின் எண்ணங்களுக்கும் பார்வைக்கும் ஏற்ப மாறுபடுவது தானே!

தமிழகத்தில் ஆங்காங்கே நான் பார்த்த காட்சிகளில் சில...

தொடர்ந்து இந்த இழையில் பகிர்ந்து வரலாம் என நினைக்கின்றேன்.

உங்கள் கருத்துக்கள் இந்த இழையைச் சிறப்பிக்கும் நண்பர்களே!.

படம் 1.

திருமலை (திருவண்ணாமலைக்கு அருகில்) பகுதியில் எடுக்கப்பட்ட படம். காலை 5.30 மணி வாக்கில் எடுக்கப்பட்டது. திருமலை சமண மடத்தில் பூஜை ஆறு  மணிக்கு நடைபெறும் என்றும் கலந்து கொள்ள தயாராகி இருக்கும் படியும் சொல்லியிருந்தார்கள். நான் 5.30 மணிக்கு முன்னராகவே எழுந்து வயல் வெளியில் நடந்த போது நிகழ்ந்த சூரியோதயத்தை என் காமெராவில் பதிவு செய்தேன்!


2 comments:

chandrasekaran108 said...

சூரியனிளே கடல் அலையை படம் பிடித்தது போல் உள்ளது!

kingraj said...

மிகஅழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

Post a Comment