Thursday, July 3, 2014

படம் சொல்லும் தமிழகம் 2014 - 3

மண் வீடு ...சென்ற ஆண்டு ஒரு நண்பர் மாலன் அறிமுகப்படுத்திய அழகிய உணவகம். இந்த ஆண்டும் சென்று வர ஆவல் ஏற்பட்டதால் பேரா.நாகராசனும், பேரா.தெய்வசுந்தரமும் மதிய உணவுக்கு எங்கே போகலாம் என்ற உடனேயே அடையாரில் மண் வீடு என்று சொல்லி விட்டேன்.முதலில் மணல் வீடு என்று சொல்லி குழப்பியதில் ..அவர்கள் தேடினால் மணல் வீடு என்ற பெயரையே டைரக்டரியில் காணவில்லை. பின்னர் நண்பரைக் கேட்டு சரி செய்து மண் வீடு என அறிந்து தேடினால் முன் வீடு என இணையம் காட்ட.. இல்லை அது மண் வீடு என அறிந்து அங்கு சென்று மதிய உணவு சாப்பிட்டோம்.

முருங்கை இலை தக்காளி ரசம் ஸ்டார்ட்டர்..கொஞ்சம் காரமாக இருந்தாலும் ம்ம்ம் சுவை பிரமாதம்..

பிறகு பதிய உணவு.. காரக் குழம்பு .. முருங்கை இலை பருப்பு கூட்டு, வாழைப்பு வடை என எல்லாம் சுவையில் ப்ரமாதம்.

1 comment:

விச்சு said...

படிக்கும்போதே பசிக்குது..

Post a Comment