Tuesday, July 11, 2017

ரைன் நதிக்கரையில் -1


இப்போது..

லுட்விக்ஸ்ஹாபன் ரைன் நதிக்கரையோரக் காட்சி..

- இளைஞர்கள் ஒன்று கூடி கதை பேசிக்கொண்டிருக்கின்றனர்

- கிறித்துவ மதப்பிரச்சாரகர் இருவர் தங்கள் கையேடுகளை வைத்துக் கொண்டு யாரும் தங்களிடம் வருவார்களா என அன்புடன் புன்னகைத்து அமர்ந்திருக்கின்றனர்.
-சிலர் ஜாகிங் செல்கின்றனர்
-நீளமான 2 கப்பல்கள் ரைன் நதியில் இரு வேறு துருவங்களில் பயணித்துக் கொண்டிருக்கின்றன
- சிலர் கொண்டு வந்த உணவை தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்
-சிலர் செல்போனில் மூழ்கி விட்டனர்
-ஒரு வீடு இல்லாதவர் பியர் பாட்டிலும் தனது மூட்டை முடிச்சுகளுடனும் ஒரு நாயுடன் அமர்ந்திருக்கின்றார்.
- நதி அதன் இயல்பான சலனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது
....
இவர்களோடு நான்..இவர்களை வாசித்தவாறு நடக்கின்றேன்.

சுபா



No comments:

Post a Comment