Saturday, September 23, 2017

ரைன் நதிக்கரையில் - 5

மீண்டும் ரைன் நதிக்கரையில் நான்
கோடை முடிந்ததோ என
தவித்த என் மனதிற்கு
புத்தொளியாய் 
இன்றைய மாலைக் கதிரவனின் காட்சி.
அழகான பெண்ணை
மேலும் அழகாக்கும் சேலை போல
ரைன் நதியின் இயற்கை அழகைக் கூட்டும்
பருத்திச் சேலையாய் சூரியன்.
இந்த அழகை மட்டுமே ரசிக்கும்
என் மனதில்
நதியின் இயல்பான சலசலப்பும்
பறவைகளும் மட்டுமே
நெருக்கமாக.
நடந்து செல்லும் மனிதர்கள்
கண்களிலிருந்து தூரமாய்.
தொடர்ந்து நடக்கின்றேன் நான்
ரைன் நதிக் கரையில்.





No comments:

Post a Comment