Tuesday, September 12, 2017

ரைன் நதிக்கரையில் -4

ரைன் நதிக் கரையில் மீண்டும் நான்...
கூட்டம் கூட்டமாக வெள்ளைப் புறாக்கள்
புறாக்களைப் போலவே மனிதர்களும்
தனித்திருப்பதில் இல்லா மகிழ்ச்சி
கூட்டமாக இருப்பதில் மனம் காணும் நிறைவு
பொதுமக்களை மறந்து
குடித்த போதை தலைக்கேறி தள்ளாடி நடக்கும் பருத்த மனிதர்
கப்பல்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய்
அன்புடன் பார்த்து சிரித்துச் செல்லும் துருக்கிய உணவுக் கடைக்காரர்
இவற்றினூடே நான்
இயல்பான நதியின் சலனத்தை
ரசித்து நடக்கின்றேன்
-சுபா


No comments:

Post a Comment