Saturday, August 9, 2014

படம் சொல்லும் தமிழகம் 2014 - 8



2014 ஜூன் தமிழகத்தின் மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில் சாலையில் நான் எடுத்த ஒரு புகைப்படம் இது.

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை பிரச்சாரம் செய்து கொண்டு மாணவர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்.

நண்பகல் 12 வாக்கில் இந்த மாணவர்கள் அணி சென்று கொண்டிருந்தனர். கொளுத்தும் வெயிலில் காலில் காலணி அணியாத  நிலையில் பாதி சிறார்கள்.

தரையின் சூடும் அது தரும் வலியும் அவர்கள் முகத்தில் இல்லை. அணிவகுப்பின் மகிழ்ச்சியே மனதை நிறைத்திருக்கின்றது இவர்களுக்கு.

மாணவர்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றான காலணி அணியும் வழக்கத்தை முறைப்படுத்தி அணிவிக்கும் பழக்கத்தைப் பெற்றோர் மறந்தாலும் ஆசிரியர் வலியுறுத்த வேண்டியது அவசியம் அல்லவா? மாணவர் நலனில் ஆசிரியருக்கும் பொறுப்புண்டே.  மாணவர்களை அணிவகுத்து சாலையில் அழைத்துச் செல்லும் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய அந்தப் பொறுப்பு இங்கே மறைந்து விட்டதே..!

காலணி அணிவது என்பது பேஷணுக்காக அல்ல.. அடிப்படை பாதுகாப்பிற்காக.. எங்கெங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டு செல்லும் மாணவர்கள் தரையில் கிடக்கும் ஏதாகினும் ஒன்றின் மேல் பாதத்தை வைத்து புண்ணாக்கிக் கொண்டால் அது அவர்களுக்கு சுகாதாரக் கேடு என்பதோடு ஏதாகினும் பின் விளைவினையும் கூட ஏற்படுத்தலாம். ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment