Saturday, August 30, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 3

கண்டெபரி நகர் யூனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பாதுக்கக்கப்பட வேண்டிய வரலாற்று நகர் என்ற சிறப்பைப் பெறுகின்றது. இரண்டாயிரம் ஆண்டு பழமை.. வரலாற்றுச் சின்னங்கள் நகர் முழுதும் இருக்கின்றன. இங்கு வருகின்ற சுற்றுப் பயணிகளுக்குக் காண்டெபெரி  பல அரிய தகவல்களை வழங்கக் காத்திருக்கின்றது.

கி.பி.5ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ரோமானியப் பேரரசின் தாக்கம் படிப்படியாக பலமிழக்க ஜெர்மனியின் வடக்குப் பகுதியிலிருந்து குடியேறிய யூட்டஸ் இனக்குழு மக்களின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. ஜெர்மனியில் மிக முக்கிய இனக்குழுக்கள் யூட்டஸ், ஏங்கல்ஸ், சாக்ஸன் ஆகியவை.  ஆக இந்த  யூட்டஸ், ஏங்கல்ஸ், சாக்ஸன் இனக்குழுவினர் இங்கிலாந்திற்கு கடல் மார்க்கமாகப் பயணித்து இப்பகுதிக்கு வந்து குடியேற்றம் செய்து தங்கள் ஆளுமை விரிவாக்கியிருந்தனர்.


சாக்ஸன், யூட்டஸ் ஏங்கல்ஸினக்குழுக்கள் ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்திற்கு புலம் பெயர்வதைக் காட்டும் வரைபடம்
நன்றி (படம்) http://www.cglearn.it/mysite/civilization/uk-culture/history-of-britain/


ரோமானியப் படைகளின் முக்கியத்துவத்தைப் பின் தள்ளி  யூட்டஸ் குழுவினரின் ஆட்சி இங்கிலாந்தில் தலையெடுக்க ஆரம்பித்தது. இந்த ஆட்சி தொடங்கியது கெண்டபரியில். The kingdom of Kent  கெண்ட் பேரரசு ஆரம்பத்தில் பேகன் சடங்கு முறைகளை அதிகாரப்பூர்வ சடங்கு முறையாக தனது ஆட்சியில் நடைமுறை வழக்கத்தில் கொண்டிருந்தது. ஆனால் 5ம் நூற்றாண்டில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வொன்று கெண்ட் பேரரசு கத்தோலிக்க மதத்தை தழுவும் நிலையை ஏற்படுத்தியது.

கெண்ட் பேரரசின் முழுமையான மதமாற்றத்தினால் இங்கிலாந்து முழுமையும் கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் நிலை உருவாகியது.

சரி.. இந்த வரலாற்று நிகழ்வு என்ன என்று தெரிந்து கொள்ள ஆரவ்ம் இருக்கின்றது தானே.. இது ஒரு ராஜா ராணி கதை.. அதனை அடுத்து சொல்கிறேன்..:-)

தொடரும்

சுபா

1 comment:

http://writersamas.blogspot.com said...

super truely story.. very nice mam..

Post a Comment