Friday, January 18, 2019

நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 9

புராணங்கள் இல்லாத மனிதர்கள் உண்டா?
நோர்வே மக்களின் வாழ்விலும் கர்ண பரம்பரைக் கதைகள் சில உள்ளன. இங்கு ட்ரோல் எனும் கதாபாத்திரம் பெரிதும் அறியப்பட்ட ஒரு கதாபாத்திரம். வயதான பெரிய பூதம் போன்ற வடிவில் இந்த புராணப்பாத்திரம் காட்டப்படுகின்றது. குழந்தைகளைப் பயமூட்டுவதற்காக இந்தக் கதாபாத்திரம் கையாளப்படுவதாகவே அறிகிறேன். நோர்வே மலைப்பகுதிகளில் உள்ள கிறிஸ்மஸ் மரங்களின் மேல் பனி படர்ந்திருக்கும் போது பார்ப்பதற்கு ஒரு பூதம் போலத்தான் இருக்கிறது. அதனை மனதில் கொண்டுதான் இந்த ட்ரோல் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாகவே ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டிருப்பது போல இது காட்டப்படுகின்றது. ஹோல்மன்கோல்லென் பகுதியில் நான் பார்த்த ஒரு ட்ரோல் சிலையையும் பனி படர்ந்த கிறிஸ்மஸ் மரங்கள் பூதம் போன்று காட்சி அளிக்கும் ஒரு படத்தையும் காணலாம்.






No comments:

Post a Comment