Monday, October 29, 2018

SriLanka - 23. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் கலாச்சார விழா நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை.
1923ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இது. 1995 முதல் 2002 வரை இராணுவக்கட்டுப்பாட்டில் இக்கல்லூரியின் வளாகம் இருந்தாலும் கடும் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெறுவதாக அறிந்தேன்.
கோலாட்டம் ஆடி எங்களை மகிழ்வித்து அழைத்துச் சென்றனர் இந்த வருங்கால ஆசிரியர்கள்.








SriLanka - 22.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை அமைப்பாக்க நிகழ்வும் தொடக்கவிழாவும், வரலாற்றுப் பயிலரங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய 200 ஆய்வாளர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கால் பங்கு கொள்கின்றனர்.

















SriLanka - 21.வரலாற்றுப் பதிவுகள்

28.10.2018 (ஞாயிறு)
யாழ்ப்பாணத்தின் சில முக்கிய வரலாற்றுப் பகுதிகளுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் சென்றிருந்தோம். அதில் குறிப்பாக:
கந்தரோடை – தமிழ் பௌத்தம் நிலைபெற்றிருந்த பகுதியாக அறியப்படும் தொல்பழங்கால மனிதர்கள் வாழ்விடம். அகழ்வாய்வுகள் செய்யப்பட்ட ஒரு பகுதி இது. இங்கு பேரா.புஷ்பரட்ணம் அவர்களது பேட்டி ஒன்று இப்பகுதி பற்றிய விளக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டது. 
(இப்பகுதியில் தற்சமயம் இலங்கை இராணுவத்தினர் இருக்கின்றனர். நான் சென்றிருந்த சமயத்தில் இரண்டு இராணுவத்தினர் வருவோர் போவோரிடம் சிங்களத்தில் பேசினர். எங்களிடமும் வந்து பேசினர். இப்பகுதியை விரிவாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராசிரியரிடம் சிங்களத்தில் கூறினர். பேருந்துகளில் சிங்களவர்கள் வந்து இப்பகுதியைப் பார்த்துச் செல்கின்றனர். )
கந்தரோடை செல்லும் சாலையில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கடந்து சென்றோம். தற்சமயம் சாலையின் இரு பக்கங்களிலும் புதிய வீடுகள் தென்படுகின்றன. இவை இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகள் என ஒருவர் குறிப்பிட்டார். வீடுகளின் தரம் மிக எளிமையானதாக உள்ளது. 10 ஆண்டுகள் இவை தாங்குமா என்பதே சந்தேகம் எனும் வகையில் இவ்வீடுகள் காட்சியளிக்கின்றன.
கீரிமலை சிவாலயம் – இது சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழம் கோயில் என அறியப்படுகின்றது. போரில் மிகுந்த சேதம் அடைந்து கடந்த ஆண்டு முழுமையாக புதிதாக கட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றது இவ்வாலயம். கோயிலின் உள்ளே சிவபுராணக் காட்சிகள் சுவர்களில் ஓவியங்களாகவும் புடைப்புச் சிற்பங்களாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
மாவட்டபுரம் கந்தசாமி கோயில் – இது கீரிமலை கோயில் அருகிலேயே இருக்கும் ஒரு சிவாலயம். போரினால் மிகுந்த சேதம் அடைந்த சிவாலயங்களில் ஒன்று இது. தற்சமயம் இக்கோயில் புணரமைக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் துர்க்கையம்மன் கோயில். இங்கு போரின் போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு இயங்குகின்றது. சைவ ஆராய்ச்சி நூலகம் ஒன்றும் இவ்வளாகத்தில் உள்ளது. துர்க்கைக்கான அர்ச்சனையாக இங்கு மனநலம் பாதிக்கபப்ட்ட பெண்களின் பெயர்கள் வரிசையாக வாசிக்கப்பட்டு அவர்களுக்கான போற்றி பாடல் இங்கு வழிபாட்டில் ஓதப்படுகின்றது.
மதியம் குரும்பையூர் (குரும்பசிட்டி) கிராமத்தில் ஏற்பாடாகியிருந்த பரிசளிப்பு விழா, தமிழ்த்தினவிழாவில் கலந்து கொண்ட்டோம். முற்றிலும் அழிக்கப்பட்ட, 30 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கிராமம் இது. இங்குப் புது குடியேற்றம் தொடங்கியுள்ளது. இங்கு ஒரு பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு அங்கு வறுமைக்கோட்டின் அடித்தளத்தில் உள்ள மக்களின் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். குழந்தைகளின் நலனுக்காக பெரும் சேவையாற்றும் ஆசிரியை வலன்ரீனா, பள்ளி அதிபர் திரு.ரவிச்சந்திரன் ஆகியோருடன் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தோம்.
மாலை திருமறை கலாமன்றம், கலைத்தூது அழகியல் கல்லூரியில் பன்மொழிப்புலவர் பாதிரியார் மரியசேவியர் அவர்களையும் அவரது அமைப்பின் குழுவினரையும் சந்தித்து கலந்துரையாடினோம். பேட்டி ஒன்று பதிவாக்கப்பட்டது.
-சுபா







Sunday, October 28, 2018

SriLanka - 20.யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்

தற்போது யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம் , கலைத்தூது அழகியல் கல்லூரியில் ..
கூத்துக்கலையை சிறப்பாக வளர்க்கும் பணியை தொடர்ந்து பல்லாண்டுகளாகச் செய்து வரும் பன்மொழிப் புலவர் பாதிரியார் மரியசேவியர். அவரோடு இன்று இணைந்து செயல்படும் இளம் ஆய்வாளர்கள் + கூத்துக் கலைஞர்களுடன் இன்று மாலை ஒரு கலந்துரையாடல்.
போர்க்காலத்திலும் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வுகளை இவரது அமைப்பு செயல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. விரிவான பதிவினை செய்துள்ளோம். பின்னர் அது வெளியிடப்படும்.






SriLanka - 19. குரும்பசிட்டி பள்ளி விழா

தற்போது.. குரும்பசிட்டி நகரில் வருடாந்திர பரிசளிப்பு விழா, தமிழ்த்தின விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக ..
குரும்பசிட்டி 30 ஆண்டுகள் இராணுவக்கட்டுப்ப்பாட்டில் இருந்த பகுதி. இப்பகுதி போரின் போது முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு பகுதி. வீடுகள், பள்ளிகள் கோயில்கள், மக்கள் உயிர்சேதம் என மிக மோசமான நிலையை அனுபவித்த ஒரு பகுதி. இன்று இங்கு ஒரு கல்விக்கோயில் எழும்பியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களின் பொருளாதார உதவியுடன் இங்கு பாடசாலை எழுப்பப்பட்டுள்ளது.
தன்னலம் மறந்த , பொதுநல சிந்தனை மட்டுமே கொண்டு செயல்படும் கிராமத் தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியை வலன்ரீனா மற்றும் ஏனைய ஆசிரியர் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்.
இப்பள்ளி மென்மேலும் வளர்ச்சியுற வேண்டும். அதற்கு பொருளாதார உதவி அடிப்படை தேவை..
உலகத் தமிழர்களே...இப்பள்ளி வளர உங்களால் இயன்ற பொருளாதார உதவிகளைச் செய்வோம். இப்பகுதி இளம் தலைமுறை நம் குழந்தைகள். இவர்கள் நல்வாழ்வு நமது நல்வாழ்வு!

https://www.facebook.com/subashini.thf/videos/2288477798062271/












-சுபா

SriLanka - 18. தமிழ் இனப்படுகொலை போரின் சாட்சிகளாக

இலங்கை தமிழ் இனப்படுகொலை போரின் சாட்சிகளாக..
காலையும் கண்களையும் இழந்தோர், சேதமடைந்த வாழ்விட பகுதிகள், சேதமடைந்த மாவிட்டபுரம் கோயில்.










SriLanka - 17. குரும்பசிட்டி பள்ளி விழா அழைப்பிதழ்

இன்று யாழ்ப்பாணத்தில் நான் கலந்து. கொள்ளும் நிகழ்ச்சி.