Friday, May 22, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -14

தென்னாப்பிரிக்காவிற்கான தமிழர்களின் குடியேற்றம் என்பது 1860களில் தொடங்குகின்றது. தென்னாப்பிரிக்காவின் நாட்டல் (Natal) பகுதியில் தமிழ் மக்களின் குடியேற்றம் என்பது நாட்டல் கரும்புத்தோட்டத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. தென்னாப்பிரிக்காவின் பெரும்பாண்மை இனக்குழுவினராகிய சூலு(Zulu) இனமக்கள் கரும்புத்தோட்டங்களில் பணிபுரிவதைத் தவிர்க்க ஆரம்பித்து விட்ட நிலையில் அங்கு பணிபுரிய அப்போதைய பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு மாற்று மனிதவளத் தேவை என்பது அத்தியாவசியமாகிப் போன சூழலில் அவர்களது பார்வை தென்னிந்தியாவை நோக்கிச் சென்றதன் அடிப்படையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த  உடல் உழைப்பு தொழிலாளர்களைத் தென்னாப்பிரிக்கா கொண்டு செல்லும் முயற்சி தொடங்கியது.

1860 ஆண்டு அப்போதைய  மட்ராஸிலிருந்து 16 நவம்பர்  டர்பன் துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் முதல் தென்னிந்திய மக்கள் வந்து சேர்ந்தனர் என்று குறிப்புக்களிலிருந்து அறிகின்றோம். அப்படி வந்த மக்களில் தமிழகத்திலிருந்து வந்த மக்களே பெரும்பான்மையினர். இந்த தமிழக மக்கள் தென்னாப்பிரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த போது தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்த உணவு, வழிபாடு, குடும்ப முறை வழக்கங்கள ஆகியவற்றையும் டொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் தவறவில்லை என்பது தென்னாப்பிரிக்கத் தமிழர்களைக் காணும் போது தெரிகின்றது.




இடைபட்ட காலத்தில் தமிழ் மொழி என்பது படிப்படியாக மறைந்து விட்ட நிலை ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது.பல தென்னாப்பிரிக்க தமிழர்களுக்கு ஒரு சொற்களும் தமிழ் தெரியாத நிலையே இருப்பது கண்கூடு. ஆயினும் தாம் தமிழ் மக்கள், என்ற உணர்வினை அவர்கள் மறக்கவுமில்லை, ஒதுக்கவுமில்லை.

தமிழ் மொழி மறக்கப்படக்கூடாது என பல தமிழ்ச்சங்கங்கள் எவ்வாறு முயற்சி செய்து வருகின்றனவோ அதே போல ஆலயங்கள் பலவும் இங்கு தமிழர் வழிபாட்டு முறைகள் மக்கள் மத்தியில் மறைந்து போய் விடாமல் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.




புற்றுமாரியம்மன் கோயிலைப் பார்க்கும் போது சிறிதும் மாற்றமில்லாது தமிழகத்து கோயில்களே நினைவுக்கு வரும் வகையில் அங்கே கிராமத்து வழிபாட்டு முறையைக் காண முடிகின்றது.



 
அர்ச்சனை தட்டை ஏந்தியவண்ணம் ஒரு பக்தர்

ஒரு பக்கம் மணலால் எழுப்பப்பட்ட அம்மன் சன்னிதி. அந்த மணல் பகுதியைச் சுற்றி எலுமிச்சை பழ மாலை. மணல்புற்றின் மேல் மலர்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. மலர் மாலைகளும் அணிவிக்கபப்ட்டிருக்கின்றன. கோழி முட்டைகளை புற்றின் மேல் பகுதியிலும் அடிப்பகுதியிலும் அடுக்கி வைத்திருக்கின்றனர்.

​வீரபத்திரன் சாமி

இன்னொரு பக்கம் வீரபத்திரன் சிலை குதிரையில் சவாரி செய்வது போன்ற தோற்றத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதுவும் கிராமத்து வழக்கில் சிறிதும் மாற்றமில்லாத வகையில் அமைந்துள்ளது.


​பக்தர்களுக்கு வேப்பிலை சார்த்தும் பெண்கள்

மாரியம்மனுக்கு மஞ்சள் நீரும் வேப்பிலையும் சார்த்துவது எப்படி தமிழக கிராமப்புறங்களில் இன்னமும் வழக்கமாக இருக்கின்றதோ அதே போல இங்கேயும்  அம்மனின் அருள் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கிட்ட வேண்டும் என நினைத்து வந்து செல்வோர் அனைவருக்கும் வேப்பிலையை உடலில் சார்த்தி அனுப்புகின்றனர். இதற்காககோயிலில் பணியாற்றும் தன்னார்வலர்கள் குறிப்பாக இளைஞர்கள் இவ்வகை பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

5 comments:

Unknown said...

I appreciate the noble vision and self-less mission of Ms. Subashini and feel it as a God send boon for millions of Tamils to know our heheritage. I salute her yeomen services in resurrecting the tradition, values and culture of Tamil and Literature towards enlightening the world and make us all proud.

Unknown said...

I appreciate the noble vision and self-less mission of Ms. Subashini and feel it as a God send boon for millions of Tamils to know our heheritage. I salute her yeomen services in resurrecting the tradition, values and culture of Tamil and Literature towards enlightening the world and make us all proud.

S.P.SENTHIL KUMAR said...

அன்புடையீர்,

வணக்கம்.
தங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருகை தந்து சிறப்பிக்கவும்.

blogintamil.blogspot.in/2015/08/blog-post_16.html

நன்றி

அன்புடன்,

எஸ்.பி.செந்தில்குமார்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரத்தில் திரு செந்தில்குமார் அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். தங்களது பதிவினைக் கண்டேன். நல்ல அனுபவங்கள்.

தனிமரம் said...

அழகான டர்பன் தொடருங்க ஆவலுடன் அடுத்த பகுதி வாசிக்கும் ஆசையில்!

Post a Comment