Sunday, April 16, 2017

டனூப் நதி - ஹங்கேரியில் மீண்டும்

டனூப் நதி..
ஐரோப்பாவின் 2வது நீண்ட நதி.
ஜெர்மனியில் ஊற்றாகித் தொடங்கி ஆஸ்திரியா, சுலோவாக்கியா, ஹங்கேரி, புல்காரியா, ரொமேனியா...என 10 நாடுகளின் குறுக்கே பாய்ந்து செல்லும் நதி. இந்த நதிக்கரையோரத்தில் பிறந்தவைதாம் பல வடிவங்களைக் கண்ட கெல்ட் மக்களின் நாகரிகம்.
...இனிமையான உணர்வுகளை எனக்குத் தந்த நதி இது..!

https://www.facebook.com/subashini.thf/videos/1951566131753441/








நான் பகிர்ந்து கொண்ட டனூப் நதி படங்களைப் பார்த்து தமிழகத்தில் இப்படி இல்லையே என சிலர் வருந்துகின்றனர்.
எனக்கும் இந்த வருத்தம் மிக அதிகமாக உண்டு.
தமிழகம் ஒரு வளமான நாடு. ஆனால் சரியாகப் பராமரிக்கப்படாததால் அதன் இயற்கை வளங்கள் சீரழிந்து விட்டன.
தமிழகத்தில் உள்ள ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளைகளை தடுக்கவும், ஆறுகள், ஏரி, குளங்களை தூர்வாரி நீரைத் தேக்கவும் பொது மக்கள் இவ்வகையில் இயங்கும் சமூக நல அமைப்புக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஏனெனில் தமிழக அரசுக்கு இத்தகைய மக்கள் நலன் சார்ந்த விசயங்களில் சிறிதும் அக்கறை இல்லை. அவர்கள் கவனம் வேறு திசையில் மட்டுமே.
மக்கள் சக்தி இணைந்தால் நாட்டு வளங்களை மீட்டெடுக்க முடியும். வளமான தமிழகத்தை விரைவில் காண முடியும்.
இதற்கு முதல்கட்ட நடவடிக்கையாக ஒவ்வொருவரும் எல்லா இடங்களிலும், அது மிகச் சிறிய குப்பையானாலும் சரி, அதனை குப்பை தொட்டியில் மட்டும்தான் போடுவேன் என மனதில் உறுதி எடுத்து அதன் படி செயல்பட வேண்டும்.
மாற்றத்தை பிறரிடம் எதிர்பார்க்காமல் நம்மிடமே அது தொடங்க வேண்டும். முடியுமா?

No comments:

Post a Comment