Saturday, April 15, 2017

witches (சூனியக்காரிகள்) - - சுலோவாக்கியா பயணம் 8

மூலிகை மருத்துவம், ஆராய்ச்சி என ஈடுபட்ட அறிவாளிகளான பெண்களை கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பா witches (சூனியக்காரிகள் ) என அழைத்து அவர்களது செயலை நீதிமன்றம் கொண்டு சென்று அங்கே அவர்களுக்குக் கொடூரமான தண்டனைகளை வழங்கியது. இதனை நிகழ்த்திய ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்சு, செக், பெல்ஜியம், போன்ற நாடுகளின் வரிசையில் சுலோவாக்கியாவும் ஒன்று.
ஏராளமான அறிவு தாகம் கொண்ட வெண்கள் கொடூரமான கொலை கருவிகளைக் கொண்டு கொல்லப்பட்டனர். இன்று 'கொடுமை பயங்கரம் அருங்காட்சியகம்' சென்ற போது ஏறக்குறைய 50 இத்தகைய கருவிகளை நேரில் பார்த்தேன்.
இன்று இத்தகைய கொடுமைகளை ஆணுலகம் நிகழ்த்தவில்லையென்றாலும் கூட பொதுவாக பெண்களுக்கெதிரான ஆணாதிக்க மனப்பான்மை என்பது உலகில் எல்லா இன மக்கள் சிந்தனையிலும் ஏதாவது ஒரு வகையில் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.


No comments:

Post a Comment