இங்கிலாந்துக்கு பலமுறை விமானம் வழி பயணத்திருக்கின்றேன். சாலை வழியாகப் பயணம் செய்து கடலைக் கடந்து சென்றடைய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இன்று அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது.
ஜெர்மனியில் லியோன்பெர்க் கிராமத்தில் இருந்து சாலை வழியாக பயணம் செய்து லக்சம்பர்க் நாட்டைக் கடந்து பெல்ஜியம் சாலைகளில் பயணித்து பிரான்சின் வடமேற்கு பகுதியில் பயணம் செய்து காலே நகரில் செயல்படுகின்ற ஃபெரி எடுத்து இப்போது அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இங்கு பயணிக்கும் போது கிமு 55 மீண்டும் கிமு 54 ஆகிய காலகட்டங்களில் ஜூலியஸ் சீசர் தனது ரோமானிய படைகளை அழைத்துக் கொண்டு இங்கிலாந்தைக் கைப்பற்ற செய்த முயற்சியில் தோல்வி கண்டு திரும்பியதும் அதன் பின்னர் ரோமானிய பேரரசு மீண்டும் கிபி 49 இல் இங்கிலாந்தைக் கைப்பற்றியதும் நினைவுக்கு வந்தது.
No comments:
Post a Comment