Friday, April 19, 2019

ரொமேனியா பயணம் - 5- தேசிய அருங்காட்சியகம்

புகாரஸ்ட் நகரில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம் இந்த நகரின் சிறப்பு வாய்ந்த ஒரு அருங்காட்சியகம் என அறியப்படுவது. கிபி 2 நூற்றாண்டில் டனுப் நதிக்கரையில் அமைக்கப்பட்ட மிகப் பெரிய கோயில் வளாகம் ஒன்றின் அனைத்து பாகங்களும் இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே பாதுகாக்கப்படுகின்றன.
அக்காலகட்டத்தில் ரோமானிய பேரரசு இப்பகுதிக்கு வந்தமையும் இங்கு ஆட்சியை கைப்பற்றி நாடு நகரம் சாலைகள் என அமைத்ததையும் இந்த ரோமானிய கோயில் புடைப்புச் சிற்பங்களாக மிக அழகாக வெளிப்படுத்துகின்றது. கிபி 110 ல் இருந்து 120 வரைக்குமான காலகட்டத்தில் அமைக்கப்பட்ட கோயிலாக இது தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சிற்ப வடிவங்கள் மிக நேர்த்தியாக இருக்கின்றன . பண்டைய ரோமானிய தாக்கத்தை குறிப்பாக இப்பகுதியில் டனுப் நதி ஓடும் இப்பகுதியில் அமைந்ததை சிறப்புடன் காட்டும் இக்கோயில் இன்று இந்த அருங்காட்சியத்தில் உள்ளேன் அழகாக பாதுகாக்கப்படுகின்றது.











No comments:

Post a Comment