Monday, October 29, 2018

SriLanka - 26. யாழ்ப்பாணத்தில் மூன்றாம் நாள் நிகழ்வுகள்

29.10.2018 (திங்கட்கிழமை)
காலை நிகழ்வு
************************
இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விரிவுரைமண்டபம் இல.408ல், காலை 9 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடைற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் திரு.சிவகணேசன் வரவேற்புரையாற்றினார்.
யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம் தலைமையுரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்குத் துணைவேந்தரின் பிரதிநிதியாக வந்து வாழ்த்துரை வழங்கினார் சித்தமருத்துவத்துறையின் தலைவர் பேரா.மிகுந்தன்.
கலைப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.சுந்தர் அவர்கள் வாழ்த்துரை வழங்கி யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை கிளை அமைத்து செயல்படுவதை பல்கலைக்கழகம் வரவேற்கின்றது எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து த.ம.அவின் பேராசிரியர்.நா.கண்ணன் “அயலகத் தமிழர் வரலாறும் இலங்கைத் தமிழர்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
”இலங்கைத் தமிழர் வரலாற்றினை ஆவணப்படுத்தலின் தேவைகள்” என்ற தலைப்பில் இந்த நிகழ்வின் நோக்கவுரையை வழங்கி தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக்கிளை அமைப்பைத் தொடக்கி வைத்தார் த.ம.அ தலைவர் கலாநிதி க.சுபாஷிணி.
யாழ் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் கருத்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொகுப்புரையை வழங்கினார் த.ம.அ செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் மதுமிதா.
நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவுக்குக் கொண்டு வந்தார் வரலாற்றுத்துறை பேராசிரியர் திருமதி.சாந்தி அருளானந்தம்.
மதிய நிகழ்வுகள்
******************
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் கலாச்சார விழா மதியம் 2லிருந்து 5 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் குழுவினர் முனைவர்.க.சுபாஷிணி, முனைவர்.நா.கண்ணன், எழுத்தாளர் மதுமிதா ஆகியோர் உரையாற்றினர்.
மாலை 6 மணிக்கு புன்னாலைக்கட்டுவன் கிராமத்தில் செயல்படும் சனசமூக நிலையத்திற்குத் த.ம.அ வின் முனைவர். க.சுபாஷிணி, எழுத்தாளர் மதுமிதா ஆகியோர் வருகை புரிந்தனர். போரினால் முற்றிலும் சேதமடைந்த இக்கிராமத்தை மீட்டெழுப்பும் பணியில் இங்குள்ள சமூக அமைப்பான ஸ்ரீ துர்கா அமைப்பும், இலங்கை ஐயை குழுமமும் செயல்படுகின்றனர். காலை நேர, மாலை நேர வகுப்புக்களை இவர்கள் இலவசமாக நடத்தி வருகின்றனர். தேசிய அளவில் பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற இக்கிராமத்தைச் சேர்ந்த தனுசியாவையும், ஆசிரியர்களையும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு செய்து கவுரவித்தனர்.
மாலை 7 மணிக்கு இணுவில் பொது நூலக சனசமூக நிலையத்திற்கு த.ம.அ குழுவினர் சென்றிருந்தோம். நூலகத்தின் சேகரத்தை பார்வையிட்டதோடு நூலகத்தின் செயல்பாடுகள், அதன ஆரம்பகால வரலாறு பற்றி கேட்டறிந்து பதிவு செய்தோம்.
-சுபா










No comments:

Post a Comment