Tuesday, October 30, 2018

SriLanka - 20.தனிநாயகம் அடிகளார் முற்றம்

எனது அண்மைய இலங்கை பயணத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்தபோது தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த ஊரான லைடன் தீவு பகுதிக்கு சென்று வர ஒரு யோசனை இருந்தது .ஆனால் அது சாத்தியப்படவில்லை. ஆயினும் யாழ் நூலகத்தின் அருகில் தனிநாயகம் அடிகள் முற்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது .அங்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர் தனிநாயகம் அடிகள். தான் பிறந்த இலங்கை தீவு மட்டுமன்றி உலகின் பல தீவுகளுக்கும் நாடுகளுக்கும் பயணம் செய்து தமிழரின் பண்டைய புலம்பெயர்வுகளைப் பற்றிய தகவல்களையும் ஆரம்பகால தமிழ் நூல் அச்சு வடிவம் பெற்றமையை உலகுக்கு கூறும் செய்திகளையும் சேகரித்து பல உலகத் தரம் வாய்ந்த ஆய்வுக் கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்தவர். இவரது நூல்களும் கட்டுரைகளும் இன்றும் தமிழர் புலம் பெயர்வு பற்றிய ஆய்வுகளுக்கு மிக முக்கிய ஆதாரமாக அமைகின்றன.


-சுபா

No comments:

Post a Comment